ஒரு காருக்கு இவ்ளோ அக்கப்போரா.. மலேசியாவில் பல மணி நேரம் டிராபிக் ஏற்படுத்திய தகராறு.. வீடியோ
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சிறிய கார் விபத்து காரணமாக ஏற்பட்ட சண்டையால் பல மணி நேரங்களுக்கு டிராபிக் ஏற்பட்டது.
கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சிறிய கார் விபத்து காரணமாக ஏற்பட்ட சண்டையால் பல மணி நேரங்களுக்கு டிராபிக் ஏற்பட்டது. மேலும் அங்கு சண்டையிட்டவர்களை அப்புறப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறி இருக்கின்றனர்.
முதலில் சிறிய அளவில் நடந்த இந்த வாக்குவாதம் பின் பெரிய அளவில் மாறியிருக்கிறது. இதன் காரணமாக அங்கு சில மணி நேரத்தில் பெரிய அளவில் டிராபிக் உருவானது.
மேலும் சாதாரணமாக நடந்த சண்டையை தடுக்க வந்த போலீசாரின் வாகனமும் தேவையில்லாமல் உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியிருக்கிறது.

சிறிய கார் விபத்து
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 'பெட்டலிங் ஜெயா' என்ற பெரிய நகரம் இருக்கிறது. மலேசியாவின் முக்கிய பகுதிகளில் ஒன்றான இதற்கு சாட்டிலைட் டவுண் என்று பெயர். மிகவும் அதிக அளவில் கார் செல்லும் இந்த நகரத்தின் சாலைகள் எப்போதும் பிஸியாகவே இருக்கும். நேற்று இதே போன்றதொரு பிஸியான நேரத்தில் அங்கு சிறிய அளவில் கார் விபத்து ஏற்பட்டது. முன்னாடி சென்ற காரை பின்னாடி சென்ற கார் லேசாக உரசி இருக்கிறது.

பெரிய சண்டையானது
இப்படி லேசாக உரசியது அங்கு பெரிய பிரச்சனை ஆகி இருக்கிறது. இந்த சிறிய கார் விபத்து காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் பின்பு சண்டையாக மாறியிருக்கிறது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். முன்னாடி இருந்த டிரைவரை கீழே இழுத்து தரையில் போட்டு மிதித்து இருக்கிறார்கள். இந்த சண்டையால் பல மணி நேரங்களுக்கு டிராபிக் ஏற்பட்டது. சாதரணமாக ஏற்பட்ட சண்டை பெரிய அளவில் வாகனங்களை சாலையில் வரிசையாக நிற்க வைத்தது.

போலீஸ் கார்னா மட்டும் விட்டுடுவோமா
இதையடுத்து அங்கு சண்டையிட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அங்கு சண்டை முற்றியிருந்தது. அவர்கள் விழுந்து புரண்டு சண்டையிட்டதை தடுக்க முடியாமல் போலீசாரும் திணறி இருக்கின்றனர். இதையடுத்து முன்னாடி இருந்த காரின் டிரைவர் அடி வாங்கிய கோபத்தில் காருக்குள் சென்று வேகமாக காரை பின்னாடி எடுத்து இருக்கிறார். இதன் காரணமாக பின்னாடி இருந்த போலீஸ் வாகனம் உடைந்து இருக்கிறது.
6 பேர் மீது வழக்கு பதிவு
இதையடுத்து அங்கு சண்டையில் ஈடுபட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போலீஸ் வாகனத்தை சேதத்திற்கு உள்ளாக்கியது குறித்து தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுளள்து. சிசிடி கேமராவில் பதிவான இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியிருக்கிறது. பேஸ்புக்கில் டிரெண்டாகி உள்ள இந்த வீடியோவுக்கு மக்கள் காமெடியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications