ஒரு காருக்கு இவ்ளோ அக்கப்போரா.. மலேசியாவில் பல மணி நேரம் டிராபிக் ஏற்படுத்திய தகராறு.. வீடியோ
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சிறிய கார் விபத்து காரணமாக ஏற்பட்ட சண்டையால் பல மணி நேரங்களுக்கு டிராபிக் ஏற்பட்டது.
கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சிறிய கார் விபத்து காரணமாக ஏற்பட்ட சண்டையால் பல மணி நேரங்களுக்கு டிராபிக் ஏற்பட்டது. மேலும் அங்கு சண்டையிட்டவர்களை அப்புறப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறி இருக்கின்றனர்.
முதலில் சிறிய அளவில் நடந்த இந்த வாக்குவாதம் பின் பெரிய அளவில் மாறியிருக்கிறது. இதன் காரணமாக அங்கு சில மணி நேரத்தில் பெரிய அளவில் டிராபிக் உருவானது.
மேலும் சாதாரணமாக நடந்த சண்டையை தடுக்க வந்த போலீசாரின் வாகனமும் தேவையில்லாமல் உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியிருக்கிறது.

சிறிய கார் விபத்து
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 'பெட்டலிங் ஜெயா' என்ற பெரிய நகரம் இருக்கிறது. மலேசியாவின் முக்கிய பகுதிகளில் ஒன்றான இதற்கு சாட்டிலைட் டவுண் என்று பெயர். மிகவும் அதிக அளவில் கார் செல்லும் இந்த நகரத்தின் சாலைகள் எப்போதும் பிஸியாகவே இருக்கும். நேற்று இதே போன்றதொரு பிஸியான நேரத்தில் அங்கு சிறிய அளவில் கார் விபத்து ஏற்பட்டது. முன்னாடி சென்ற காரை பின்னாடி சென்ற கார் லேசாக உரசி இருக்கிறது.

பெரிய சண்டையானது
இப்படி லேசாக உரசியது அங்கு பெரிய பிரச்சனை ஆகி இருக்கிறது. இந்த சிறிய கார் விபத்து காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் பின்பு சண்டையாக மாறியிருக்கிறது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். முன்னாடி இருந்த டிரைவரை கீழே இழுத்து தரையில் போட்டு மிதித்து இருக்கிறார்கள். இந்த சண்டையால் பல மணி நேரங்களுக்கு டிராபிக் ஏற்பட்டது. சாதரணமாக ஏற்பட்ட சண்டை பெரிய அளவில் வாகனங்களை சாலையில் வரிசையாக நிற்க வைத்தது.

போலீஸ் கார்னா மட்டும் விட்டுடுவோமா
இதையடுத்து அங்கு சண்டையிட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அங்கு சண்டை முற்றியிருந்தது. அவர்கள் விழுந்து புரண்டு சண்டையிட்டதை தடுக்க முடியாமல் போலீசாரும் திணறி இருக்கின்றனர். இதையடுத்து முன்னாடி இருந்த காரின் டிரைவர் அடி வாங்கிய கோபத்தில் காருக்குள் சென்று வேகமாக காரை பின்னாடி எடுத்து இருக்கிறார். இதன் காரணமாக பின்னாடி இருந்த போலீஸ் வாகனம் உடைந்து இருக்கிறது.
6 பேர் மீது வழக்கு பதிவு
இதையடுத்து அங்கு சண்டையில் ஈடுபட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போலீஸ் வாகனத்தை சேதத்திற்கு உள்ளாக்கியது குறித்து தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுளள்து. சிசிடி கேமராவில் பதிவான இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியிருக்கிறது. பேஸ்புக்கில் டிரெண்டாகி உள்ள இந்த வீடியோவுக்கு மக்கள் காமெடியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications