மத்திய இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு
மத்திய இத்தாலியில் உள்ள நார்க்கியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
ரோம்: மத்திய இத்தாலியின் நார்க்கியா அருகே பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ரோம் நகருக்கு 132 கிமீ வடகிழக்கேயும் பெருகியாவுக்கு 67 கிமீ கிழக்கிலும் இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழ் 10கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் இதுவரை காயங்கள், உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரோம் நகரில் இருந்து வடகிழக்காக 132 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் வீடுகள் குலுங்கின, இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
சமீபத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியின் அருகேவே காலை 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன.
நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கிஉள்ளன, இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. இதற்கிடையே இத்தாலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவுக்கொண்டது என்று ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி வெளியிட்டு உள்ளது.
இத்தாலியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 298 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications