உக்கிரமடையும் போர்! உக்ரைன் நாட்டில் மற்றொரு இந்திய மாணவர் உயிரிழப்பு.. பரபர தகவல்
கீவ்: உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் வின்னிட்சியாவில் மற்றொரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டில் போர் உச்சத்தில் உள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போர் 6 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது.
இருதரப்பிற்கும் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வான்வழி மூடல்
உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இந்தப் போர் ஆரம்பித்தது முதலே ஒட்டுமொத்த உக்ரைன் வான்வழியும் மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக அங்கு மாணவர்கள் உட்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ளவர்களை மீட்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீட்பு பணிகள்
அங்குச் சிக்கியுள்ளவர்களை மாற்று வழிகளைப் பயன்படுத்தி தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகள் வழியாக இந்தியர்களைத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதற்காகச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மீட்புப் பணிகளில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மாணவர் உயிரிழப்பு
இருப்பினும், உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளுக்குச் சென்ற மாணவர்களை மட்டுமே இப்போது இந்திய வெளியுறவுத் துறை மீட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து வெளியேற முடியாத சூழலில் உள்ள மாணவர்களின் நிலை அச்சமாகவே உள்ளது. இந்தச் சூழலில் உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார்.

என்ன காரணம்
உயிரிழந்த அந்த மாணவர் 21 வயதான சந்தன் ஜிண்டால், 21 என்பது தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைனின் வின்னிட்சியாவில் தங்கிப் படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 2ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டவே, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிப்ரவரி 7 ஆம் தேதி, அவரது பெற்றோரும் சந்தன் ஜிண்டாலை பார்த்துக் கொள்ள உக்ரைன் சென்றனர். இந்தச் சூழலில் சாந்தன் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Recommended Video

தீவிரமடையும் தாக்குதல்
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் இப்போது தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குக் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications