சவுதி அரேபியாவில் மசூதி மீது ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப் படைத் தாக்குதல் - 13 பேர் பலி
ரியாத்: சவுதி அரேபியாவில் மசூதி ஒன்றில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சவுதி அரேபியா பகுதியில் உள்ள சவுதி - ஏமன் எல்லையில் சிறப்பு பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தில் உள்ள மசூதியில் நேற்று மதிய நேர தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே நுழைந்த மர்ம நபர் ஒருவர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்.
இதில் அவசர படைப்பிரிவைச் சேர்ந்த 13 வீரர்கள் உயிரிழந்தனர். ஒன்பது வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது. சமீபகாலமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சவுதி படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, இதற்கு பதிலடி தரும் விதத்தில் ஐஎஸ்ஐஎஸ் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
கடந்த மே மாதத்தில் இருந்து சவுதி அரேபியாவிலுள்ள மசூதிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குவது இது மூன்றாவது முறை ஆகும்.