குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் 15 நிமிடம் உயிருக்குப் போராடிய ஸ்ரீதேவி
குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் 15 நிமிடம் உயிருக்கு போராடியிருக்கிறார் ஸ்ரீதேவி.
Recommended Video

துபாய்: மதுபோதையில் குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் 15 நிமிடம் உயிருக்கு போராடி மரணித்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி.
துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீதேவி தங்கியிருந்த விடுதியில் மரணமடைந்தார். இந்தியாவையே இந்த செய்தி உலுக்கி எடுத்தது.

அறிக்கை சொல்வது என்ன?
தற்போது ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான துபாய் தடயவியல் அறிக்கையை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் ரத்த மாதிரிகளில் ஆல்கஹால் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி உயிரிழப்பு ஏன்?
மேலும் குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் இதயம் நின்று போனதால் ஸ்ரீதேவி உயிர் பிரிந்தது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணியளவில் குளியல் அறைக்கு ஸ்ரீதேவி சென்றிருக்கிறார்.

உயிருக்கு போராடிய ஸ்ரீதேவி
அப்போது மது போதையில் இருந்ததால் குளியல் தொட்டியில் தவறி விழுந்திருக்கிறார். குளியல் தொட்டியில் தவறி விழுந்த ஸ்ரீதேவி எழுந்திருக்க முடியவில்லை. எழுவதற்காக 15 நிமிடம் போராடியிருக்கிறார்.

சடலமாக மீட்பு
ஆனாலும் அந்த போராட்டம் பலன் தரவில்லை. குளியல் தொட்டியில் நீரில் மூழ்கிய நிலையில் அப்படியே மரணித்துவிட்டார் ஸ்ரீதேவி என்கிறது துபாய் தடவியல் அறிக்கை. இந்த 15 நிமிடத்துக்குப் பின்னரே கணவர் போனிகபூரால் குளியல் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார் ஸ்ரீதேவி.












Click it and Unblock the Notifications