அமெரிக்காவில் பாக். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 'நோஸ் கட்' கொடுத்த சுஷ்மா சுவராஜ்!
நியூயார்க்: சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களில் கூட்டத்திலிருந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாதியிலேயே வெளியேறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
73 வது ஐக்கிய நாடுகள் சபை பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐநா உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நியூயார்க் சென்று உள்ளனர்.
இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் சார்பில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

வெளியுறவு அமைச்சர்கள்
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான 'சார்க்' நாடுகளை சேர்ந்த அனைத்து வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இதில் பங்கேற்றுளளனர் என்பதால், இன்று சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான அதிகாரப்பூர்வமற்ற ஒரு சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிளம்பிவிட்டார்
இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்தியா சார்பிலான கருத்துக்களை வலியுறுத்தி விட்டு சுஷ்மா ஸ்வராஜ் வெளியே கிளம்பி சென்றுவிட்டார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷா மெகமூத் குரேஷி, இதுபற்றி கூறுகையில், சுஷ்மா சுவராஜ் பாதியிலேயே வெளியேறியது உண்மைதான். ஒருவேளை அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

சந்திப்பு தேவையில்லை
சுஷ்மா சுவராஜ் மட்டுமல்ல அவருக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூட வெளியேறி இருந்தனர். இருப்பினும் சுஷ்மா சுவராஜ் வெளியேறுவதற்கு காரணம், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் உடனான மரியாதை நிமித்தமான பேச்சுவார்த்தையை கூட தவிர்ப்பது தான் என்று கூறப்படுகிறது.

இந்தியா புறக்கணிப்பு
ஏனெனில் அமெரிக்காவில் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், காஷ்மீரை சேர்ந்த 3 போலீஸ்காரர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டது, மற்றும் தீவிரவாதி புர்கான் வானிக்கு தியாகி என்ற அந்தஸ்துடன் பாகிஸ்தானில் தபால் தலை வெளியிட்டது ஆகிய செயல்பாடுகளால் கோபம் அடைந்த இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பாக். பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்திருந்தார்.
["சிறிய மனிதர்கள் பெரிய பதவிக்கு வந்தால் இப்படித்தான்.." இந்திய அரசு மீது இம்ரான் கான் கடும் கோபம் ]
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications