ஏ உலகமே எங்களைக் காப்பாற்று... சமூக வலைதளங்களில் உதவி கேட்கும் சிரியா சிறுவர்கள்!
சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரால் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதால் தங்களுக்கு உதவுமாறு வீடியோக்களை பதிவு செய்து சிறுவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
டமாஸ்கஸ்: சிரியாவில் தீவிரமாகி வரும் உள்நாட்டுப் போரில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்படுவதால் தங்களுக்கு உதவ வேண்டும் என்று சிறுவர்கள் சமூக வலைதளங்களின் உதவியை நாடியுள்ளனர்.
சிரியாவின் குவாட்டா 2013 முதல் ஆசாத் படைகளின் வசம் உள்ளது, கடந்த 2 வாரங்களாக இந்தப் பகுதிகளில் கடுமையான உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் படையிடம் இருந்து குவாட்டா பகுதியை மீட்பதற்காக அதிபர் அல்ஆசாத் படைகள் பீயங்கரமான அணுகுண்டுகளை வீசி வருகிறது.
குவாட்டாவில் திரும்பிய திசையெங்கும் இடிந்த கட்டிடங்கள், இறந்த மனித உடல்கள் என்று போரின் கோரத்தாண்டவ காட்சிகளை வெளிக்காட்டுகின்றன. குவாட்டாவின் அவல நிலையை சிறுவர்கள் பலர் முகநூலில் வீடியோவாக பதிவிட்டு உதவியை நாடி வருகின்றனர்.

சிதைந்த பள்ளிகள்
15 வயது சிரிய நாட்டு சிறுவன் முகமது நஜீம், குவாட்டாவின் அழிவை புகைப்படங்கள், வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அண்மையில் இந்தச் சிறுவன் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னுடைய பள்ளி ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சிரிய அதிபர் அல் ஆசாத்தின் போர்குற்றங்களுக்கு பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளான்.

உதவாத உலக நாடுகள்
சிறுவன் நஜீமின் பதிவுகள் கிழக்கு குவாட்டாவின் தற்போதைய நிலையை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. குவாட்டா மக்களின் அமைதியான வாழ்க்கை கபளீகரம் செய்யப்பட்டு விட்டதாகவும், உலக நாடுகள் தங்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் நஜீம் குற்றம்சாட்டுகிறார்.
|
நப்னை பலி வாங்கிய போர்குண்டுகள்
குண்டுவீசி நடத்தப்பட்ட தாக்குதலில் தன்னுடைய நண்பனும், அவனது குடும்பத்தாரும் உயிரிழந்துவிட்டதாக நஜீம் உருக்கத்துடன் தெரிவிக்கிறார். நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடி இருக்கிறோம் ஆனால் இன்று எனது நண்பன் இல்லை நான் மட்டுமே இங்கு இருக்கிறேன் என்று கூறியுள்ளான் நஜீம்.
|
உதவி கேட்டும் சகோதரிகள்
இதே போன்று நூர் மற்றும் ஆலா சகோதரிகள் கிழக்கு குவாட்டாவின் அவலங்களை டுவிட்டரில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். "நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம் எங்களைக் காப்பாற்றுங்கள் கால கடப்பதற்குள் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று சகோதரிகள் மன்றாடுகின்றனர்.
இதே போன்று குவாட்டாவின் நிலைமை பற்றி அங்குள்ள கடைகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் சகோதரிகள் நேர்காணல் கண்டு அதனையும் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications