கூடங்குளம் அணுமின் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது... ரஷ்யா தகவல்
மாஸ்கோ: ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் பேரழிவு ஏற்பட்ட பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக கூடங்குளம் அணுமின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அணு ஆற்றல் துறை இயக்குநர் விளாடிமிர் ஏ.ஏஞ்சலோ தெரிவித்துள்ளார்.
ரஷிய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் நிறுவப்பட்டு தொடங்கப்பட்டது. இதற்கு எதிராக பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த அணுமின் நிலையத்தினால் தென் தமிழகமே பாதிக்கப்படும் போராட்டக்காரர்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில், மாஸ்கோவில் உலக அணு சக்தி மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணுமின் திட்டங்களுக்கான ரஷ்ய அணு ஆற்றல் துறை இயக்குநர் ஏஏஞ்சலோ, இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,
ஜப்பானின் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தின் மூலம் எங்களுக்கு சில அனுபவம் கிடைத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கூடங்குளம் அணுமின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அணு மின் நிலையத்தின் 3, 4-ஆவது அணு உலைகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல மாற்றங்களைச் செய்துள்ளோம். குறிப்பாக நில அதிர்வை தாக்கும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களை செய்துள்ளோம். இதற்காக அதிகமாக செலலவாகிறது என்ற போதிலும் முதலில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலைகளை அமைப்பதற்கான வடிவமைப்பைத் தொடங்கிவிட்டோம். 2-ஆவது மின் உலையில் இந்த மாதம் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். முதல் அணு உலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன என்பதால், இரண்டாவது உலையை மிக கவனத்துடன் இயக்க இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications