தாய்லாந்து: வெற்றிகரமாக மீட்கப்பட்ட 13 பேர்.. கொடூர குகைக்கு நிரந்தர சீல்!
தாய்லாந்து 13 பேர் அகப்பட்ட குகைக்கு தற்போது அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பாங்காக்: தாய்லாந்து 13 பேர் அகப்பட்ட குகைக்கு தற்போது அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
உலகில் இருக்கும் சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகைதான் இந்த மோசமான வரலாற்றை சுமந்து இருக்கிறது. இந்த மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள்.
விளையாட்டு சுற்றுலா சென்ற இவர்கள் கடந்த 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர். சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. பல போராட்டத்திற்கு பின் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

தற்போது கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது.ஒரு நாளுக்கு நான்கு பேர் என்று மூன்று நாட்களில் மீட்டு இருக்கிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை பார்த்தனர். அமெரிக்கா, தாய்லாந்து, சீனா, இங்கிலாந்து, ஜப்பான் பணியாளர்கள் பணியாற்றினார்கள்.
இந்த பாதையில் வருவது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருப்பதாக பயிற்சி பெற்ற கடல் வல்லுனர்களோ தெரிவித்து இருந்தனர். இடையில் பெரிய அளவில் மேடான இடம் இருப்பதால், அதை தாண்டுவது மிகவும் கடினமாக இருந்தது.
தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். குகையில் சிக்கிய 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் உட்பட அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். மூன்று நாட்களாக மீட்பு பணி நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த குகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது . இனி இந்த குகைக்குள் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் இதுவும் ஒன்று என்ற பெயரை இது பெற்றுள்ளது.
இனி இந்து பகுதியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தற்போது மீட்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications