நைஜீரியா காடுகளில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் மூத்த தலைவர் முகமது ஜகரி கைது
லாகோஸ்: போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் மூத்த தலைவர் முகமது ஜகரியை போலீசார் நைஜீரியாவில் வைத்து கைது செய்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகிறார்கள். அவர்கள் அவ்வப்போது கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது, மக்களை கடத்துவது என்று அநியாயம் செய்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி சிபோக் நகரில் இருந்து 217 பள்ளி மாணவிகளை கடத்தினர். அவர்கள் இன்னும் விடுவவிக்கப்படவில்லை.
தீவிரவாதிகளின் உளவுப் பிரிவு தலைவரான தொழில் அதிபர் பாபுஜி யாரி இந்த மாத துவக்கத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டரான முகமது ஜகரியை (30) போலீசார் நைஜீரியாவில் வைத்து கைது செய்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் ஜகரி.
நைஜீரியாவின் பாவ்சி மாநிலத்தில் உள்ள பால்மோ காடுகளில் பாதுகாப்பு துறையினர் கடந்த சனிக்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் தான் ஜகரி சிக்கினார். ஜகரி காம்பே காடுகளில் அப்பா டாரா என்ற தீவிரவாதியிடம் பயிற்சி பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ஜகரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பால்மோ காடுகளுக்கு வந்துள்ளார்.
போக்கோ ஹரம் வடகிழக்கு நைஜீரியா, வடக்கு காமரூன் மற்றும் நைஜரை சார்ந்து உள்ளது. போக்கோ ஹரமை தனி இஸ்லாமிய மாநிலமாக அறிவித்து அதை ஷரியத் சட்டப்படி ஆள வேண்டும் என்று தான் தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள்.
தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் 10 ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நைஜீரியாவின் போர்னோ மாநில எல்லையில் உள்ள லிமானி நகரின் முக்கிய மத தலைவரான பீஷெய்ர் மொஹமனின் வீட்டுக்குள் புகுந்து அவரது மகன்கள் பீஷெய்ர் ஹஷிமிர் மற்றும் பீஷெய்ர் கவாயே ஏக் ஆகியோரை கடத்திச் சென்றுள்ளனர்.
மொஹமன் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததுடன், காமரூன் ராணுவத்திற்கு தங்களை பற்றி தகவல் அளித்ததால் தீவிரவாதிகள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லாததால் அவரது மகன்களை கடத்திச் சென்றுவிட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications