ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கியது பேச்சுவார்த்தை.. போர் நிற்குமா.. உலகமே எதிர்பார்ப்பு
கீவ்: உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை தற்போது பெலாரஸில் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருக்கின்றன.
அதனடிப்படையில் இன்று மதியம் 2.30 மணிக்கு அமைதி பேச்சு வார்த்தை தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறது.

போர்
உக்ரைன் நேட்டோ நாடுகளின் சபையில் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உக்ரைன், சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்ததும், ஐரோப்பாவோடு சேர விரும்பியது. உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால், அந்த பக்கம் அமெரிக்க படை நிறுத்தப்படும் என்று கருதி ரஷ்யா தொடர்ந்து எதிர்த்து வந்தது.

போர்
இதனால் இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில் ராணுவ வீரர்கள் நிறுத்தி வைத்தனர். இதனால் பதற்றம் அதிகரித்தது. ரஷ்யா போர் தொடுக்கும் என உலக நாடுகள் எச்சரித்தன. நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தன. இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு முன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறோம் என அறிவித்துவிட்டு தாக்குதலைத் தொடங்கியது ரஷ்யா.

பேச்சுவார்த்தை
இரு தரப்பிலும் போர் தீவிரமாக நடந்து வருகிறது. இரு தரப்பிலும் பொருட் சேதம், உயிர் சேதமும் நடந்திருக்கிறது. உக்ரைன் மீது தீவிரமாக தாக்கியது ரஷ்யா. இதனால் செர்னோபில் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் கைப்பற்றியது ரஷ்யா. தலைநகர் கீவ் நோக்கி முன்னேறியது ரஷ்ய படை. இந்நிலையில், உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த நிலையில், ரஷ்யாவும் தயாரானது.
Recommended Video

அமைதி திரும்பட்டும்
இதையடுத்து, உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை தற்போது பெலாரஸில் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர். அமைதி பேச்சுவார்த்தைக்கு முன் போருக்கான எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டது. போரின் தீவிரத்தை ரஷ்யா குறைத்திருப்பதாக உக்ரைன் தற்போது தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications