ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கியது பேச்சுவார்த்தை.. போர் நிற்குமா.. உலகமே எதிர்பார்ப்பு
கீவ்: உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை தற்போது பெலாரஸில் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருக்கின்றன.
அதனடிப்படையில் இன்று மதியம் 2.30 மணிக்கு அமைதி பேச்சு வார்த்தை தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறது.

போர்
உக்ரைன் நேட்டோ நாடுகளின் சபையில் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உக்ரைன், சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்ததும், ஐரோப்பாவோடு சேர விரும்பியது. உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால், அந்த பக்கம் அமெரிக்க படை நிறுத்தப்படும் என்று கருதி ரஷ்யா தொடர்ந்து எதிர்த்து வந்தது.

போர்
இதனால் இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில் ராணுவ வீரர்கள் நிறுத்தி வைத்தனர். இதனால் பதற்றம் அதிகரித்தது. ரஷ்யா போர் தொடுக்கும் என உலக நாடுகள் எச்சரித்தன. நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தன. இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு முன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறோம் என அறிவித்துவிட்டு தாக்குதலைத் தொடங்கியது ரஷ்யா.

பேச்சுவார்த்தை
இரு தரப்பிலும் போர் தீவிரமாக நடந்து வருகிறது. இரு தரப்பிலும் பொருட் சேதம், உயிர் சேதமும் நடந்திருக்கிறது. உக்ரைன் மீது தீவிரமாக தாக்கியது ரஷ்யா. இதனால் செர்னோபில் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் கைப்பற்றியது ரஷ்யா. தலைநகர் கீவ் நோக்கி முன்னேறியது ரஷ்ய படை. இந்நிலையில், உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த நிலையில், ரஷ்யாவும் தயாரானது.
Recommended Video

அமைதி திரும்பட்டும்
இதையடுத்து, உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை தற்போது பெலாரஸில் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர். அமைதி பேச்சுவார்த்தைக்கு முன் போருக்கான எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டது. போரின் தீவிரத்தை ரஷ்யா குறைத்திருப்பதாக உக்ரைன் தற்போது தெரிவித்துள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications