ஷூ வெடிகுண்டு மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: அமெரிக்கா எச்சரிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு ஆப்கான் தலீபான்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதில், ‘25 ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டில் இருந்து சோவியத் ரஷியப் படைகள் தப்பி ஓடின. அதே விதியைத்தான் இன்றைக்கு அமெரிக்காவும் சந்திக்கப்போகிறது. அந்தக் காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்பட்ட அதே கதியை இன்றைய அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவுக்கு நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம். நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை (சோவியத் ரஷியா) உலக வரைபடத்தில் இருந்தே நீக்கி விட்டோம். அல்லா விரும்பினால், இதே நிலைதான் உங்களுக்கு ஏற்படும்.'' என மிரட்டியிருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களுக்கு நேற்று முதல் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம், விமான பயணிகள் போல ‘ஷூ' வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் ஊடுருவலாம், எனவே உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தீவிர சோதனையிடவும் என ஹோம்லண்ட் செக்யூரிட்டி பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் விமானங்களில் பயணி போல தீவிரவாதிகள் ஒப்பனை பொருட்கள் மற்றும் திரவங்கள் வாயிலாகவும் வெடிபொருட்களை மறைத்து வைத்து கொண்டு வரலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. எனவே விமான பயணம் மேற்கொள்வோரை கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால், எந்த தகவலின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது என்ற தகவல்கள் தெளிவாக விளக்கப்படவில்லை.
-
ரூ.1.7 கோடி சம்பளம்.. "ஒரு பைசா கூட வரி கட்ட வேண்டாம்.." பெண் பைலட் பகிர்ந்த ரகசியம்! -
பெரிய சதி.. அதானியின் ஒப்பந்தத்தை கைப்பற்றிய சீன நிறுவனம்! பின்னணியில் இவ்வளவு நடந்து இருக்கா? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications