இறுதிச் சடங்கில் உயிர் பெற்ற 3 வயது பிலிப்பைன்ஸ் சிறுமி... தற்போது மீண்டும் மரணம்- இணையத்தில் "பரபர"
மணிலா: உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்த 3 வயது சிறுமி, இறுதிச் சடங்கின் போது மீண்டும் உயிர் பெற்று எழுந்த சம்பவம் பிலிப்பைன்சில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால் தற்போது அந்த சிறுமி நிஜமாகவே உயிரிழந்து விட்டார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அரோரா பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை டாக்டர்களும் உறுதி செய்தனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தார் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது சிறுமியின் உடலில் சிறிய அசைவு ஏற்படுவதைக் கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சிறுமி. அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்தனர்.
ஆனால் உயிர் பெற்று எழுந்த சிறுமி மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமாவுக்குப் போய் விட்டதாகவும், அவர் தற்போது இறந்து விட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் இறுதிச் சடங்கு மற்றும் மீண்டும் அவர் உயிரோடு இருப்பது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியான இரண்டே நாளில் சுமார் 40 லட்சம் மக்கள் இந்த வீடியோவைக் கண்டு ஆச்சர்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த 79 வயது தாத்தாவும் இப்படித்தான் இறந்து விட்டதாக கூறப்பட்டார். இதையடுத்து அவரை ஒரு பையில் வைத்து கட்ட முயன்றபோது அவர் உயிருடன் மீண்டு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தினார். அதேபோல எகிப்து நாட்டில் 28 வயது நபர் ஒருவர் மரணச் சான்றிதழ் எல்லாம் வாங்கி முடித்த பின்னர் , உடலை அடக்கம் செய்யப் போகும் நேரத்தில் எழுந்து வியப்பில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
<center><iframe width="100%" height="315" src="//www.youtube.com/embed/01jlRChW_uM" frameborder="0" allowfullscreen></iframe></center>
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications