வாவ்! ரொம்ப அழகாக இந்தி பேசுறீங்களே! ஜப்பான் சிறுவனை வியந்து பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!
டோக்கியோ: குவாட் மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜப்பானை சேர்ந்த சிறுவன் இந்தி மொழியில் பேசினார். இதனால் மகிழ்ச்சியடைந்த பிரதமர் மோடி, ‛வாவ்... எங்கு இந்தி கற்றாய்? உனது இந்தி மிகவும் அழகாக இருக்கிறதே?' என வியந்து பாராட்டி ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‛குவாட்' அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் உச்சிமாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனிவிமானத்தில் ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார்.

குவாட் மாநாடு
ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். முன்னதாக நேற்று அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஜப்பான் தொழில்அதிபர்களை சந்தித்து பேசினார். இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார். மேலும் டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்களின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பிரதமர் மோடி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் ஜப்பானுடனான இந்தியாவின் உறவு, ஆன்மிகம், ஒத்துழைப்பு பற்றி பேசினார். மேலும் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது என பெருமையாக பேசினார். இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை பொதுமக்கள் வரவேற்றனர். ஜப்பான் நாட்டு குழந்தைகள் பிரதமர் நரேந்திர மோடியின் படம், இந்திய தேசியக்கொடி ஆகியவற்றை ஓவியமாக வரைந்து வரவேற்றனர்.

இந்தியில் பேசிய ஜப்பான் சிறுவன்
அப்போது இந்திய தேசியக்கொடி வரைந்து மோடியை, ஜப்பான் டோக்கியோவை சேர்ந்த சிறுவன் காத்திருந்தான். அவன் பிரதமர் நரேந்திர மோடியினட் இந்தி மொழியில் பேசினான். இதனை கேட்ட பிரதமர் நரேந்திர மோடி பூரித்தார். மேலும் ‛வாவ், இந்தி எங்கு கற்றாய்? உனக்கு ரொம்ப நன்றாக தெரிகிறதே?' எனக்கூறி வியந்தார். மேலும் சிறுவன் வைத்திருந்த இந்திய தேசியக்கொடியின் படத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.

மகிழ்ச்சி
இதுபற்றி அந்த சிறுவனிடம் கேட்டதற்கு, ‛‛என்பெயர் விசுகி. நான் 5ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு இந்தி மொழியில் அதிகம் பேச வராது. ஆனால் புரிந்து கொள்வேன். பிரதமர் நரேந்திர மோடி நான் எழுதி வைத்திருந்ததை வாசித்து பாராட்டினார். மேலும் கையெழுத்திட்டு கொடுத்தார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications