ஜாலி ஹார்பரில் ஜாரி ரைடு.. சோக்ஷியுடன் சிக்கிய பெண்.. கணவரின் தோழி அல்ல.. மனைவி விளக்கம்!
ஆன்டிகுவா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் ஏமாற்றிவிட்டு ஆன்டிகுவா நாட்டில் தப்பியோடிய மெகுல் சோக்ஷியுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார் என்பதில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக் கொண்டு அதை திருப்பி செலுத்தாமல் நீரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்ஷியும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் ஆன்டிகுவா நாட்டில் மெகுல் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் அவரை காணவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த நிலையில் டொமினிகாவில் ஜாலி ஹார்பரில் ஒரு பெண்ணுடன் ஜாலி டிரிப் வந்ததாகவும் அப்போது மெகுல் கைது செய்யப்பட்டதாகவும் டொமினிகா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி
இந்த நிலையில் இந்த பெண் யார் என்பது குறித்து இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. மெகுல் சோக்ஷி தனது பெண் தோழியுடன் விருப்பத்துடன் டொமினிகாவுக்கு ஜாலி டிரிப் சென்றதாக ஆன்டிகுவான் பிரதமர் காஸ்டான் பிரவுன் தெரிவித்தார். ஆனால் சோக்ஷியின் வழக்கறிஞரும் அவரது மனைவியும் வேறு மாதிரி சொல்கிறார்கள்.
|
விஜய் அகர்வால்
இதுகுறித்து வழக்கறிஞர் விஜய் அகர்வாலும் சோக்ஷியின் மனைவி ப்ரீத்தி ஆகியோர் கூறுகையில் என் கணவருடன் கைதான பெண்ணின் பெயர் பாபரா ஜராபிகா. அவர் நடைப்பயிற்சி செல்லும் போது எனது கணவருடன் பழக்கமானார். சோக்ஷியுடன் கடந்த 6 மாதங்களாக நட்புபாராட்டி வருகிறார் ஜராபிகா.

ஜாலி ஹார்பர்
தனது வீடு ஆன்டிகுவாவில் ஜாலி ஹார்பரில் உள்ளதாக தெரரிவித்த ஜராபிகா, அங்கு எனது கணவரை கடந்த மே 23 ஆம் தேதி விருந்து சாப்பிட அழைத்தார். அந்த இடத்தில்வைத்து தான் எனது கணவரை 8 முதல் 10 பேர் கடத்தி அவரை கடுமையாக தாக்கி தூக்கிச் சென்றார்கள். அந்த பெண் ஆன்டிகுவாவை சேர்ந்தவரல்ல. அவர் அவ்வப்போது அந்த நாட்டிற்கு வந்து செல்பவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அவர் அந்த நாட்டுக்கு வந்துள்ளார்.

புகார்
ஆன்டிகுவாவில் நாங்கள் வசித்த அபார்ட்மென்ட்டுக்கு அருகேயும் அவர் தங்கியுள்ளார். சொத்துகளை புதுப்பிக்கும் பணியின் ஆலோசகராக அவர் கூறிவந்தார். எனது கணவரை கடத்திய பிறகு அந்த பெண் தலைமறைவாகிவிட்டார். கடத்தல் விவகாரத்தில் அவருக்கு தொடர்பில்லை எனில் அவரது வீட்டுக்கு சென்ற இடத்தில் எனது கணவரை யாரோ கடத்தியதை அவர்தானே முதலில் ஆன்டிகுவா போலீஸுக்கு புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் தலைமறைவாக இருக்கிறாரே. அந்த பெண்ணின் உண்மையான பெயர் பாபரா ஜெராபிகா என்பது கூட தெரியவில்லை. ஊடகங்களில் வெளியாகும் பெண்ணின் புகைப்படத்தை பார்த்தால் எனது கணவருடன் நட்பு பாராட்டிய பெண்ணை போல் இல்லை என ப்ரீத்தி தெரிவித்தார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications