நம்மூர் ‘முதல்வன்’ ஸ்டைலில்... ஒருநாள் போலீஸான ரத்தப் புற்றுநோய் பாதித்த 9 வயது சிறுவன்
டெட்ராய்ட்: உலக புற்றுநோய் தினத்தையொட்டி, நேற்று டெட்ராய்ட் காவல்துறை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு நாள் காவல்துறை ஆணையர் பதவி கொடுத்து அவனது கனவை நனவாக்கியுள்ளது.
நேற்று உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப் பட்டது. எனவே, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவின் டெட்ராய்ட் காவல்துறை ஒரு திட்டமிட்டது.
அதன்படி, புற்றுநோயால் பாதிக்கப் பட்ட 9 வயது சிறுவன் ஒருவனை ஒருநாள் காவல் அதிகாரியாக நியமித்தது.

போலீஸ் கனவு...
அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியைச் சேர்ந்த ஜோவான் ஃபெல்டன் என்ற 9 வயது சிறுவன் லிம்ஃபோபிலாஸ்டிக் லுக்கோமியா என்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தான். வலியின் வேதனையிலும், மரண பயத்திலும் தனது வாழ்நாளை கழித்து வரும் ஃபெல்டனுக்கு, தான் வளர்ந்து பெரியவனாகி, போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு உள்ளதாக கூறப்படுகிறது.

விழிப்புணர்வு...
சிறுவனின் கனவு மருத்துவர்கள் மூலம் அந்நகரப் போலீசாரின் காதுகளை எட்டியுள்ளது. எனவே, புற்றுநோய் தினத்தில் அச்சிறுவனின் கனவை நிறைவேற்ற காவல்துறை முடிவு செய்தது.

சல்யூட் வரவேற்பு....
அதன்படி, நேற்று காலை அவனுக்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட போலீஸ் சீருடையை மருத்துவர்கள் குழு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஃபெல்டனை வாகனத்தில் ஏற்றி, டெட்ராய்ட் நகர காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு, அனைத்து காவலர்களும் சல்யூட் அடித்து ஃபெல்டனை வரவேற்றுள்ளனர்.

ஒருநாள் போலீஸ்....
இன்று ஒரு நாள் மட்டும் டெட்ராய்ட் நகர போலீஸ் தலைமை அதிகாரியாக பதவியேற்றுக் கொள்கிறேன் என்று ஃபெல்டன் உறுதி மொழி எடுத்துக் கொண்டு, அன்றைய பணிகளை, சக காவலர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளான்.

ரொம்ப சந்தோஷம்ங்க....
‘காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற தனது கனவு, இதன் மூலம் நிறைவேறியது என்றும், மகிழ்ச்சியில் திளைத்திருந்த போது, உடல் நலம் தேறி அடுத்த ஆண்டிலாவது பள்ளிக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளான் ஃபெல்டன்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications