Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணா விட்ருங்க ப்ளீஸ்..குளத்துக்குள் சிக்கிய ஜோடி! கத்திமுனையில் சிதைந்த மாணவி.. மாட்டிய 5 பேர்!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே குண்டு குளம் பகுதியில் கல்லூரி காதலர்கள் தனிமையில் சந்திக்க சென்ற போது காதலனின் கழுத்தில் கத்தியை வைத்து கத்தி முனையில் மிரட்டி காதலியான கல்லூரி மாணவியை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் குண்டு குளம் பகுதியில் தனிமையில் சந்திக்க சென்ற கல்லூரி காதலர்கள் சென்ற நிலையில், காதலனின் கழுத்தில் கத்தியை வைத்து கத்தி முனையில் மிரட்டி பலவந்தமாக தூக்கி சென்று காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் விப்பேடு-குண்டுகுளம் எல்லை பகுதியில்,கிராம பகுதியையொட்டி வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை அமைந்துள்ளது.

காதலர்கள்

காதலர்கள்

இந்தப் புறவழிச் சாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும். இந்த சாலையை ஒட்டி பெட்ரோல் நிலையங்கள் உணவகங்கள் தனியார் பள்ளிகள் என அமைந்துள்ளதும், புதிய குடியிருப்பு பிளாட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓர் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவன் மற்றும் மாணவி கடந்த இரு வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

தனிமையில் சந்திப்பு

தனிமையில் சந்திப்பு

இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி காதலன் தனது கல்லூரி காதலியை தனிமையில் சந்திக்க விரும்பி தனது காதலியை அழைத்துக் கொண்டு விப்பேடு-குண்டுகுளம் இடைப்பட்ட பகுதியில் உள்ள காலி வீட்டுமனை பகுதி சென்று அங்கு அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியின் அருகாமையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த மர்ம கும்பல் தனிமையில் இருந்த கல்லூரி காதலர்களை கண்டதும் மது போதையில் காதலனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, அப்பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

காதலனின் கழுத்தில் கத்தி வைத்ததால் செய்வதறியாது கத்தி கதறி அழுதும், கல் மனம் படைத்த அந்த மது போதை நபர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணை

விசாரணை

இதனையெடுத்து இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திட டிஎஸ்பி ஜூலியர் சீசர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற் கொண்டு இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஐந்து நபர்களை காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் கைது செய்துள்ளனர்.

 5 பேர் கைது

5 பேர் கைது

காஞ்சிபுரம் விப்பேடு பகுதியைச் சேர்ந்த ஊக்கு என்கிற சிவகுமார்,செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்,விப்பேடு பகுதியைச் சேர்ந்த விமல் என்கிற விமல்குமார் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் தென்னரசு என்கிற தென்னமரம் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ள காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+