வாரிசு அரசியல்.. திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி.. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
கன்னியாகுமரி: வாரிசு அரசியலால், திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காலையில் மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மாலையில் கன்னியாகுமரியில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசுகையில், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, அய்யா வைகுண்டர், காமராஜர், மார்ஷல் நேசமணி உள்ளிட்டோரை நினைவு கூர்கிறேன். வளர்ச்சி என்ற மந்திரத்தை முன் வைத்து நாங்கள் மக்களை எதிர்கொள்கிறோம்

அதிருப்தி
எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியலையே முக்கியமானதாக கருதுகின்றனர், வாரிசு அரசியலால், திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது. வாரிசு அரசியலுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர்.

சட்டப்பிரிவு 356
சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி பல மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி கலைத்துள்ளது. கொரோனாவால் பல நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தாயகம் அழைத்து வந்தோம். தமிழ்நாட்டிலிருந்து சுமார் 5லட்சம் சகோதர சகோதரிகள் நாடு திரும்பினர். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த தமிழக பாதிரியாரை மீட்டோம்.

விவசாயிகளின் வருமானம்
கடலோர மேம்பாட்டுக்காக 3 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்த மத்திய பாரதிய ஜனதா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேளாண் துறையை நவீனமயமாக்கி வருகிறோம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு கடுமையாக உழைத்து வருகிறது.

சாலை மேம்பாட்டு பணி
புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படுவதால் உள்ளூர் மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக ரூபாய் 1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே புதிய பொருளாதார வழித்தடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒருசிலர் மட்டுமே இந்தியாவை உருவாக்கவில்லை, இந்தியர் பலரின் வியர்வைத் துளிகளால் உருவானது" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications