நாட்டிலேயே முதல்முறை குமரி கடலில் கண்ணாடி பாலம்.. இன்று திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2ம் நாள் நிகழ்ச்சிகளாக, இன்று காலை பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரை நிகழ்த்துகிறார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரையும் முதல்வர் வெளியிடுகிறார்.
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25வது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, இந்தியாவிலேயே முதன் முறையாக திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே கடல் நடுவே 37 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்துள்ளார்.

கடல் மீது கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன், அந்த கண்ணாடி பாலம் மீது கடல் அழகை ரசித்தவாறே நடந்து சென்றார்.
திருவள்ளுவர் சிலை: பிறகு, திருவள்ளுவர் சிலையின் மேல் தளம் சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து திருவள்ளுவர் சிலையை சிறிது நேரம் ரசித்தார். பிறகு திருக்குறள் நெறிபரப்பும் 22 தகைமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
படகுத்துறையில் திருவள்ளுவர் மணல் சிற்பத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி வண்ண விளக்குகளில் திருவள்ளுவர் சிலை ஒளிர்வதையும், ஸ்டாலின் ரசித்து பார்வையிட்டார். பிறகு "திருக்குறளால் அதிக நன்மை தனி மனிதருக்கே, சமுதாயத்திற்கே" என்ற தலைப்பில், சுகி சிவம் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.
ரசித்து கேட்ட முதல்வர்: தனி மனிதருக்கே என்ற தலைப்பில் ராஜாராம், மோகனசுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோரும், சமுதாயத்திற்கே என்ற தலைப்பில் புலவர் சண்முக வடிவேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ராஜா ஆகியோரும் இந்த பட்டிமன்றத்தில் பங்கேற்றிருந்தனர். பட்டிமன்றத்தை ரசித்து கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் அரசு விருந்தினர் மாளிகை திரும்பினார்.
இந்நிலையில், 2ம் நாள் நிகழ்ச்சிகளாக இன்று காலை 9.30 மணிக்கு திருவள்ளுவர் வெள்ளிவிழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.. விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரை நிகழ்த்துகிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் இந்த பொதுக்குழுவில் பங்கேற்று பேசுகிறார்கள். தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்கிறார். கலெக்டர் அழகுமீனா நன்றி கூறுகிறார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரையும் முதல்வர் வெளியிடுகிறார்.
2 நாள் குறைப்பு: முன்னதாக, கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன், நாளை ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று டிசம்பர் 31ம் தேதியே நடைபெறும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications