கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து - பெரும் சேதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெரும் விபத்து ஏற்பட்டது. பக்தர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி: பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெரும் விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஊரடங்கு தடைக்காலம் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும். அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
கேரளம் மாநிலத்திலிருந்து ஏராளமான பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோவிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் வழக்கம்போல் புதன்கிழமை காலை பூஜை நடந்துகொண்டிருந்த போது கோவிலின் மேற்கூரையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த குளச்சல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
காலை பூஜை நடந்து கொண்டிருந்தபோது, கோவில் மேற்கூரையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு கோவில் அர்ச்சகர்களிடம் விபரம் கேட்டறிந்தார்.