கோவிலுக்கு ''கோ தானம்'’ வழங்கிய ஓ.பி.எஸ்.இளைய மகன்..!
கன்னியாகுமரி: சுசீந்தரத்தில் உள்ள தாணுமாலயன் சுவாமி கோவிலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் பசுவையும், கன்றையும் தானமாக வழங்கியுள்ளார்.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் இணைந்த உருவமமே தாணுமாலயன். கன்னியாகுமரி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் தான் தேவத்தூதர்களின் தலைவன் இந்திரனுக்கே விமோசனம் கிடைத்ததாக கூறப்படுவது உண்டு.

இந்நிலையில், தாணுமாலயன் கோயிலுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் பசுவையும் கன்றையும் தானமாக வழங்கி வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
ஓ.பி.எஸ்.வீட்டில் எல்லோரையும் விடவும் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர் ஜெயபிரதீப். அவரை அவரது ஆதரவாளர்கள் ஆன்மீகச் செம்மல் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ்.ஸின் குலதெய்வக் கோயிலுக்கு தேவையான உதவிகளை பார்த்து பார்த்து செய்பவர் ஓ.பி.ஜெயபிரதீப்.
தானங்களிலேயே மிகவும் சிறந்தது எனக் கூறப்படுவது கோ தானம் மட்டுமே. மனதில் நினைத்த காரியம் வெற்றிக்கரமாக முடிய கோ தானம் செய்வது வாழக்கம். மேலும், சுபகாரியங்கள் நடக்கவும், பாவ விமோசனம் பெறவும் கோ தானம் செய்யக்கூடும்.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட அந்த தானத்தை ஜெய பிரதீப் செய்துள்ளார் என்றால் அதன் பின்னணி இல்லாமலா இருக்கும் எனக் காதைக் கடிக்கின்றனர் தேனி திமுகவினர். தந்தைக்கு முக்கியப் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அரசியல் பாதையில் தனக்கு குறுக்கீடுகள் வரக்கூடாது என்பதற்காகவும் தான் அவர் கோ தானம் செய்ததாக கூறுகின்றனர்.
கடவுளை வேண்டினால் கூட அதற்கு காரணம் கற்பிப்பதா..? இது போன்று உங்களிடம் பேசுபவர்களை நினைத்தால் வருத்தமாக தான் இருக்கிறது என பதில் அளிக்கிறது ஜெயபிரதீப் வட்டாரம் .
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications