முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி..கரூர் மக்களுக்கு விரைவில் நற்செய்தி வரும்.. சொல்கிறார் செந்தில் பாலாஜி
கரூர்: கரூருக்கு விரைவில் விமான நிலையம் வந்து விடும் என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புத்தாம்பூர் அருகே ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா வளாகத்தில் கரூர் மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களுடான ஆலேசானை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் காந்தி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கைத்தரி மற்றும் ஜவுளி துறை அணையர் பீலாராஜேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார்
அப்போது கூட்டத்தில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் காந்தி பேசுகையில், 'கொரோனா கால கட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்று அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பதவி ஏற்ற சில நாட்களிலேயே துறையில் நடைபெறும் குறைகளை கேட்டு, நடவடிக்கைகள் எடுக்க சொன்னார் முதல்வர். டெக்ஸ்டைல்ஸ் 450 கோடி வர்த்தகம், 4500 பேர் தொழிலில் நேரடியாக ஈடுபட்டு, ஒன்றரை லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

கருணாநிதியை விட அதிகம்
நிச்சயமாக எந்த கோரிக்கையாக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கருணாநிதி ஆட்சியிலும் சரி, தற்பொழுதும் ஸ்டாலின் ஆட்சியிலும் சரி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தொழில் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை தெரிந்து வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கருணாநிதி, அண்ணாவை விட அதிகம் தெரிந்து வைத்துள்ளார் என்று கூறினார்,.

சாயப்பட்டறை பூங்கா
இதனை தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் ஜவுளி துணி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டுதல் பிரதான தொழிலாக உள்ளது. ஜவுளித் துறைக்கு முக்கியமான சாயப்பட்டறை பூங்கா அமைப்பது கடந்த காலத்தில் செயல்படுத்த முடியாத நிலையில், தற்போது அது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கரூருக்கு விமான நிலையம்
நிச்சயம் முதல்வர் ஜவுளி பூங்காவிற்கு அனுமதி அளித்து, நிதியையும் ஒதுக்குவார். தொழில் வளர்ச்சி பெற வேண்டும், விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சாயப்பட்டறை பூங்கா அமைக்கப்படும்.தேர்தல் அறிக்கையில் முதல்வர் கூறியது போல கரூர் மாவட்டத்தில் விமானம் நிலையம் அமைக்க வழி வகை செய்யப்படும். 100 % வளர்ச்சி பெற்ற மாவட்டமாக கரூர் மாறும் என்று செந்தில் பாலாஜி கூறினார்.
-
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications