Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசூரில் உல்லாசத்தின் போது மனைவிக்கு இப்படி ஆகிடுச்சு.. கண்ணீர் விட்ட ஜிம் மாஸ்டர் சிக்கியது எப்படி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர், அந்த பகுதியில் நான்கு இடங்களில் ஜிம் நடத்தி வருகிறார். இவர் சசிகலா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜிம் மாஸ்டர் பாஸ்கருக்கும், அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாம். இந்த விவகாரம் தெரியவந்ததும், மனைவி சசிகலாவிற்கு எதிராக ஜிம் மாஸ்டர் பாஸ்கரன் என்ன செய்தார் தெரியுமா? அவர் போட்ட நாடகத்தில் அவரே எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியை சேர்ந்த 34 வயதாகும் பாஸ்கர் ஜிம் மாஸ்டர் ஆவார். இவர், ஓசூரில் காமராஜர் காலனி, சீதாராம் மேடு, ஜூஜூவாடி மற்றும் ராஜேஸ்வரி லேஅவுட் ஆகிய 4 இடங்களில் 'ஜிம்' வைத்து நடத்தி வருகிறார். பெங்களூருவை சேர்ந்த சசிகலா (33 வயது) அங்குள்ள மாகடி சாலையில் சிறுவர்களுக்கான பள்ளியும் நடத்தி வந்தார். ஜிம் மாஸ்டர் பாஸ்கர் பேஸ்புக் மூலமாக சசிகலா உடன் பழகி உள்ளார்.

What was the master plan hatched by gym master Bhaskar against his beloved wife Sasikala in Hosur Krishnagiri district How did the police discover and arrest him

இந்த நட்பு காதலாகி உள்ளது. பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு ஓசூரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் சசிகலா ஓசூர் காமராஜ் காலனியில் பெண்களுக்கான 'ஜிம்' நடத்தி வந்தார். பாஸ்கர் சசிகரலா தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஜிம் மாஸ்டர் பாஸ்கருக்கும், அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை ஓசூர் அலசநத்தம் பகுதியில் பாஸ்கர் தனியாக குடி வைத்திருந்தாராம். இது சசிகலாவுக்கு தெரியவரவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா மீது பாஸ்கர் கோபம் அடைந்தாராம்.

கடந்த ஏப்ரல் 30-ந் தேதி இரவு பாஸ்கரும், சசிகலாவும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, திடீரென சசிகலாவுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாக கூறி அவரை, பாஸ்கர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சசிகலா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து போலீசார், சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனிடையே, சசிகலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். இதையடுத்து சசிகலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், பாஸ்கரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் நாடகம் அம்பலத்திற்கு வந்துள்ளதாம். சம்பவம் நடந்த ஏப்ரல் 30ம் தேதி அன்று பாஸ்கரும், சசிகலாவும் மது அருந்தி உள்ளனர். பின்னர் மனைவியின் கை, கால்களை கட்டிப்போட்டு உல்லாசமாக இருந்தாராம் பாஸ்கர். ஏற்கனவே மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த பாஸ்கர் இதனை தனக்கு சாதகமாக்கி சசிகலாவின் கழுத்தை துணியால் இறுக்கி அவரை கொலை செய்துவிட்டாராம்.

பின்னர் மனைவியின் மூக்கில் ரத்தம் வந்து விட்டது எனக் கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரிழந்ததாக நாடகமாடினாராம். ஆனால் பிரேத பிரசோதனை அறிக்கை மற்றும் போலீசாரின் விசாரணையில் சிக்கியது தெரியவந்துள்ளது. ஜிம் மாஸ்டர் பாஸ்கரை சிப்காட் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+