மூச்ச்ச்.. "பிளைட் பறந்தா சத்தம் வரும்".. ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்காக 100 விமானங்கள் ரத்து!
லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது இறுதி சடங்கு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
சுமார் 70 ஆண்டுக்காலம் ராணியாக வாழ்ந்த இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யும் நாளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது விமான போக்குவரத்தில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
ராணியின் உடல் அடக்கம் செய்யப்படும்போது அமைதியை கடைப்பிடிக்கும் விதமாக சில விமானங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது.

நல்லடக்கம்
கடந்த 1952ல் பிரிட்டனின் ராணியாக பொறுப்பேற்றுக்கொண்ட இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுக்காலம் ராணியாக இருந்துள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட உடல் நலக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இது பிரிட்டனுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. அவரது மறைவையொட்டி 10 நாட்கள் துக்க நாளாக அனுசரிக்கபட்டு வருகிறது. வரும் 19ம் தேதி திங்கட்கிழமையன்று ராணியின் உடல் வின்ட்சர் கேஸ்டலில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

விமான பயணங்களில் மாற்றம்
இந்த நிகழ்வின்போது அமைதியை கடைப்பிடிக்கும் விதமாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இயங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது பயண திட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது, இந்த இறுதி சடங்கு நிகழ்வில் அமைதியை கடைப்பிடிக்கும் விதமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது விமான இயக்க அட்டவணையில் 15% மாற்றங்களை செய்து 100 விமானங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு ரத்து செய்துள்ளது. ஒரே நேரத்தில் இந்த அத்தனை விமானங்களும் ரத்து செய்யப்படாமல், நேரம் பிரிக்கப்பட்டு விமான இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இறுதி சடங்கு
ராணியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து முடித்து அனைவரும் சிறிது நேரம் அமைதியை பின்பற்றுவார்கள். இதனை கருத்தில் கொண்டு காலை 11.40 முதல் மதியம் 12.10 வரை 30 நிமிடங்களுக்கு விமான இயக்கங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல ராணியின் உடல் ஊர்வலத்தின்போது மதியம் 1.45 மணிக்கு தொடங்கி 35 நிமிடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படாது. மேலும் மாலை மாலை 3.05 மணிக்கு தொடங்கி 1.40 மணி நேரம் வரை அதாவது மாலை 4.50 மணி வரை விமானங்கள் இயக்கப்படாது.

மாற்றங்கள்
இந்த தடைகள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களுக்கு மட்டுமே என்பதால் இதில் முன்பதிவு செய்தவர்கள் வேறு விமானங்களில் பயணித்துகொள்ளலாம் அல்லது பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு மாற்றிய போது இதேபோல சுமார் 2 மணி நேரத்திற்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமையான நாளை, 1 நிமிட அமைதியை கடைப்பிடிக்குமாறு தனது பயணிகளை ஹீத்ரோ விமான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல உடல் நல்லடக்கம் செய்யும் திங்கட்கிழமையன்று அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications