பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வு.. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
லண்டன்: 2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசும் ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

நேற்று மருத்துவத் துறை
இந்த வரிசையில் 2021ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இயற்பியல் நோபல் பரிசு
அமெரிக்காவின் ஸ்க்யூரா மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன கண்டுபிடிப்பு
ஸ்க்யூரா மனாபே மற்றும் கிளாஸ் ஹசில்மேன் ஆகியோர் பூமியின் வானிலையில் இயற்பியல் மாதிரிக்காகவும் புவி வெப்பமடைதலின் மாறுபாட்டை அளவிட்டு துல்லியமாக கணித்ததற்கும் வழங்கப்பட்டது.
ஜார்ஜியோ பரிசிக்கு, உடல்கோளாறுகள் மற்றும் ஏற்ற இறக்க இடைவெளியைக் கண்டறிந்ததற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கை
இயற்பியலுக்கான நோபல் குழுவின் தலைவரான தோர்ஸ் ஹான்ஸ் ஹான்சன், வெளியிட்ட அறிக்கையில் "இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், காலநிலை பற்றிய நமது அறிவு ஒரு திடமான அறிவியல் அடித்தளத்தில் உள்ளது என்பதை நிரூபிக்கிறது. சிக்கலான இயற்பியல் அமைப்புகளின் பண்புகள் மற்றும் பரிணாமம் பற்றிய ஆழமான நுண்ணறிவைப் பெற நமக்கு இந்த கண்டுபிடிப்புகள் பங்களித்தது. " என்று கூறியுள்ளார்.
|
வாழ்த்துக்கள்
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தரராஜன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், புவி வெப்பமாதலை துல்லியமாக கணிக்க இயற்பியல் மாதிரிகளை உருவாக்கி காலநிலை மாற்றத்தை உறுதிபடுத்த ஆய்வுகளை மேற்கொண்ட சுயுகுரோ மற்றும் க்ளாஸுக்கும் இவர்களுடன் ஜியாரியோவுக்கும் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். இதேபோல பலரும் நோபல் பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications