பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்தனை பேரையும் விடுவித்த கையோடு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே. யாதவ்!
லக்னோ: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து தினமும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில், 2015ல் இருந்து விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவுக்கு உச்ச நீதிமன்றம் பதவிக் காலம் நீட்டிப்பு வழங்கி இருந்தது. இன்று தீர்ப்பு வழங்கிய கையோடு பணி ஓய்வு பெறுகிறார் நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டிலேயே ஓய்வு பெற்று இருக்க வேண்டும். இந்த வழக்கிற்காக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்தது.

தீர்ப்பு
செப்டம்பர் ஒன்றாம் தேதியுடன் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ 351 சாட்சிகளிடம் விசாரணையை நடத்தி முடித்து இருந்தது. மேலும் 600 பேரிடம் இந்த விசாரணை முடிக்கப்பட்டு இருந்தது. இந்த விசாரணைகள் முடிந்த மறுநாளே நீதிபதி எஸ்.கே. யாதவ் தீர்ப்பு எழுத துவங்கிவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார்.

கால அவகாசம்
தினமும் விசாரணை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று 2017ல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்தும் மேலும் அவகாசம் வேண்டும் என்று நீதிபதி கேட்டு இருந்ததால் வழங்கபட்டு இருந்தது. இதையடுத்து இறுதியாக செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதி எஸ்.கே. யாதவ் தினமும் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

சமூக விரோதிகள்
இந்த வழக்கில் முன்பே எதிர்பார்க்கப்பட்டது போல், மசூதியை இடிப்பதற்கு முன்பே திட்டமிட்டு இருந்தனரா என்ற விவகாரத்துக்குத்தான் நீதிபதி எஸ்.கே. யாதவ் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். திட்டமிடவில்லை என்றும், சமூக விரோதிகள்தான் இடித்தனர் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கேள்விகள்
இந்த வழக்கில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் மட்டும் 100 கேள்விகளை நீதிபதி கேட்டு இருந்தார். அனைத்து கேள்விகளுக்கும் தனக்கு பதில் தெரியாது என்று அத்வானி கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications