சிவலிங்கம் சர்ச்சையை கிளப்பிய ஞானவாபி வழக்கு.. மசூதி நிர்வாகத்தின் இந்து வழக்கறிஞர் திடீர் மரணம்
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜராகி வாதாடி வந்த இந்து வழக்கறிஞர் திடீரென்று மரணமடைந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனருகே காசி விஸ்வநாதர் கோவிலும் உள்ள நிலையில் இந்து கோவில் ஒன்றை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஞானவாபி மசூதி வழக்கு
இதற்கிடையே தான் கடந்த ஏப்ரல் மாதத்தில் 5 இளம்பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவில், ‛‛ஞானவாபி மசூதி வளாக வெளிப்புற சுவரில் சிங்காரகவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூஜைகளும் நடத்தப்படும் நிலையில் தினமும் பூஜை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள பிற விக்கிரகங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத தெய்வங்களை வழிபட அனுமதிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

சிவலிங்கம் சர்ச்சை
இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் ஆய்வுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஆய்வு நடத்தப்பட்ட ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே தான் மசூதியில் சிவலிங்கம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தேசிய அளவில் விவாதப்பொருளானது. இந்துத்துவ அமைப்பினர் ஆய்வுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மசூதி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கம் அல்ல. அது செயற்கை நீருற்று என முஸ்லிம் அமைப்பினர் கூறி வருகின்றனர்.

இந்து வழக்கறிஞர் மரணம்
இதற்கிடையே நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மசூதியின் குறிப்பிட்ட பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. இருப்பினும் முஸ்லிம்கள் தொடர்ந்து தங்களின் நடைமுறையை மசூதியில் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜராகி வாதாடி வந்த இந்து வழக்கறிஞர் அபய்நாத் யாதவ் (வயது 65) திடீரென்று மரணமடைந்துள்ளார்.

காரணம் என்ன?
இந்த வழக்கில் ஞானவாபி மசூதி நிர்வாகம் சார்பிலான வழக்கறிஞர்கள் குழுவில் அபய்நாத் யாதவ் மட்டுமே இந்து ஆவார். இவர் மே மாதம் 24ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்றத்தில் வாதாடினார். இதுதொடர்பான வழக்கு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் அபய்நாத் யாதவ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இதுபற்றி மசூதி நிர்வாகத்தின் இணை செயலாளர் எஸ்எம் யாசீன் கூறுகையில், ‛அபய்நாத் யாதவ் மரணம் ஷாக்காக உள்ளது. அவரது இழப்பால் இன்னொரு மூத்த வழக்கறிஞரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்'' என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications