உத்தர பிரதேச தேர்தலில் 387 தொகுதியில் காங்கிரஸின் ‛டெபாசிட்’ காலி.. சிறுகட்சிகளை விட படுமோசம்
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் 399 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் 387 வேட்பாளர்கள் ‛டெபாசிட்' இழந்துள்ளனர். சிறுகட்சிகள் கூட ‛டெபாசிட்' இழக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு மார்ச் 7 ல் முடிவடைந்தது. இதையடுத்து மார்ச் 10ல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்கிறார்.

255ல் பாஜக
இந்த தேர்தலில் பாஜக 255, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 111, ஏடிஏஎல் 12, ஆர்எல்டி 8, நிசாத், எஸ்பிஎஸ்பி தலா 6, காங்கிரஸ் 2,மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் வென்றன. இங்கு ஆட்சி அமைக்க 202 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

டெபாசிட் இழப்பு
இந்நிலையில் உத்தர பிரேதச மாநிலத்தில் போட்டியிட்டவர்களில் ஏராளமானவர்கள்‛டெபாசிட்' தொகையை இழந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு சட்டசபை தொகுதியில் பதிவாகும் மொத்த ஓட்டுக்களில் 6ல் ஒரு பங்கு ஓட்டுக்களை வேட்பாளர்கள் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் டெபாசிட் தொகையை இழப்பார். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 4,442 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,522 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். இது 80 சதவீதமாகும்.

காங்கிரஸ் மோசம்
குறிப்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தான் அதிகளவில் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். அதன்படி மொத்தம் 399 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் 387 தொகுதிகளின் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். மேலும் மொத்தம் 2.4 சவீத ஓட்டுக்களை மட்டும் காங்கிரஸ் பெற்று பின்தங்கியுள்ளது.

பகுஜன் சமாஜ் எவ்வளவு
இதேபோல் 403 தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் 290 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளனர். பாஜக 376 தொகுதிகளில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் கூட அந்த கட்சியின் 3 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 347 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 6 பேர் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

ஆச்சரியமளிக்கும் சிறுகட்சிகள்
மேலும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிறுகட்சிகள் ஆச்சரியமளிக்கின்றன. பாஜகவின் கூட்டணியில் இடம்பிடித்திருந்த அப்னாதளம்(சோனிலால்), நிசாத் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் தொகையை இழக்கவில்லை. இந்த 2 கட்சிகளும் சேர்த்து மொத்தம் 27 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில் இருந்த எஸ்பிஎஸ்பி, அப்னாதளம்(காமிரவாதி) கட்சிகளுக்கு மொத்தம் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். இன்னொரு கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக்தளம் ( ஆர்எல்டி) கட்சி 33 இடங்களில் களமிறங்கி 3 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது.

ஆர்எல்டியை விட காங்., குறைவு
இந்த தேர்தலில் மேலும் கவனிக்க கூடிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில் இருந்த ஆர்எல்டி கட்சி மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் அந்த வேட்பாளர்கள் 2.9 சதவீத ஓட்டுக்களை பெற்றிருந்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி 399 தொகுதிகளில் வெறும் 2.4 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்று பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications