வேலைவெட்டி இல்லாமல் வெட்டியாக எதிர்க்கட்சிகள்.. பாஜக ஒரே போடு.. கொந்தளித்த மாயாவதி!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் எந்த வேலையும் இன்றி இருப்பதாக பாஜக கூறிய நிலையில் அதற்கு பதிலளித்து பேசிய மாயாவதி, இது 'பாஜக கட்சியின் ஆணவ சிந்தனையையும், பொறுப்பற்ற அணுகுமுறையையுமே காட்டுகிறது' என்று பேசியுள்ளார்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அங்குள்ள லக்கிம்பூர் கேரியில் சகோதரிகளான 2 பட்டியல் இன சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை
இந்த சம்பவத்தை தொடர்ந்து அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து இருப்பதாக எதிர்கக்ட்சிகள் ஆளும் பாஜகவை விமர்சித்து வருகின்றன. ஆனால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தில் குற்றச்சம்பவங்கள் அடியோடு குறைந்துள்ளது என்றும், இங்குள்ள சட்டம் ஒழுங்கு உலகிற்கே எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது என்றும் கூறி வருகிறார்.

மழைக்கால கூட்டத்தொடர்
இந்த சூழலில், அம்மாநில சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. சட்டமன்ற கூட்டம் நடைபெற இருந்த நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்திய பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவ் தலைமையில் தங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து சட்டப்பேரவை வளாகம் வரை பேரணியாக சென்றனர்.

எந்த வேலையும் இல்லை
அகிலேஷ் யாதவின் இந்த பேரணியை விமர்சித்த உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுர்யா, ''சமாஜ்வாடி கட்சிக்கு தற்போது எந்த வேலையும் இல்லை. எதிர்க்கட்சிகளின் இந்த பேரணி சாதாரண மக்கள் நலனுக்கானது அல்ல. பிரச்சினை குறித்து பேச விரும்பினால் சட்டசபையில் அது குறித்து பேச எந்த தடையும் இல்லை. எங்கள் அரசு விவாதத்திற்கு தயாராகவே உள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தவே செய்யும்'' என்றார்.

கோபமடைந்த மாயாவதி
எதிர்க்கட்சிகளை வேலையின்றி இருப்பதாக பாஜக விமர்சித்ததால் கடும் கோபம் அடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பாஜவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து மாயாவதி கூறியிருப்பதாவது:- ''எதிர்க்கட்சிகள் எந்த வேலையும் இன்றி இருப்பதாக பாஜக கூறியிருப்பது அந்த கட்சியின் ஆணவ சிந்தனையையும், பொறுப்பற்ற அணுகுமுறையையுமே காட்டுகிறது. மக்கள் நலன் மற்றும் பொது நலனில் நேர்மையையும், விசுவாசத்தையும் காட்டுவதே அரசின் சிந்தனையாக இருக்க வேண்டுமே தவிர எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கொடிய மனப்பான்மையை காட்டுவதாக இருக்கக்கூடாது'' என்றார்.

உண்மையிலேயே பொது நலன் இருக்குமானால்
மாயாவதி மேலும் கூறுகையில், ''உத்தர பிரதேச அரசுக்கு உண்மையிலேயே பொது நலன் மற்றும் வளர்ச்சி பற்றி அக்கறை இருக்குமேயானால் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்கள் வந்திருக்காது. பணவீக்கம், வறுமை, வேலைவாய்ப்பு இன்மை, மோசமான சாலைகள், தரமற்ற கல்வி, சுகாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகியவை குறித்து பாஜக பேச வேண்டும்'' என்றார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!











Click it and Unblock the Notifications