பரோலா.. வேண்டவே வேண்டாம்.. "வெளியில்" இருப்பதை விட "உள்ளே" இருப்பதுதான் சேஃப்.. சிறை கைதிகள்
லக்னோ: வெளியுலகத்தை விட சிறைச்சாலையே பாதுகாப்பானது என தனக்கு கிடைத்த பரோலை வேண்டாம் என மறுத்துவிட்டார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைதி ஒருவர்.
இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலை தீவிரமாக உள்ளது. இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று தலைவிரித்தாடுவதால் மக்கள் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள்.
இந்த நிலையில் கொரோனா தொற்றை காட்டிலும் சிறையே எவ்வளவோ பாதுகாப்பானது என சிறைக் கைதி ஒருவர் தனக்கு கிடைத்த பரோலை வேண்டாம் என கூறிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்துகிறது.

கைதி
சிறைச் சாலைகளிலும் அதிக கைதிகளால் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கைதிகளை பரோலில் அனுப்பி சிறையில் கூட்ட நெரிசலை குறைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் சிறையில் விசாரணைக்கு வந்த 326 கைதிகள் பரோலில் அனுப்பப்பட்டுள்ளனர்.

பரோலில் அனுப்ப முடிவு
மேலும் 43 தண்டனை கைதிகளையும் பரோலில் அனுப்ப உ.பி. அரசு உத்தரவிட்டது. இதன்படி இவர்கள் 8 வாரங்கள், அதாவது 2 மாதங்களுக்கு பரோலில் வீட்டுக்கு அனுப்பப்பட இருந்தனர். இந்த நிலையில் இதற்கான ஆர்டரை கைதிகளுக்கு சிறைத் துறையினர் வழங்கினர்.

சிறைக் கைதி
அப்போது ஆஷிஷ் குமார் என்ற சிறைக் கைதி மட்டும் பரோலில் செல்ல மறுத்துவிட்டார். காரணம் கேட்டால் கொரோனா காலத்தில் வெளியுலகை விட சிறைச்சாலையே பாதுகாப்பானது என கூறியுள்ளாராம். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு காசியாபாத்தில் அவரது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதால் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் தண்டனையில் உள்ளார்.

21 கைதிகள்
இவரை போல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 9 சிறைகளில் உள்ள 21 சிறை கைதிகள் பரோலை வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். இவர்களுக்கு 90 நாட்கள் பரோல் கிடைத்தால் அவர்களது தண்டனை காலத்தில் இந்த நாட்கள் சேர்க்கப்படும் என்பதாலும் பரோலை மறுக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications