உ.பி. அரியணையை தீர்மானித்த ஜாதி அரசியல் இனி இருக்காது.. அடித்து சொல்லும் அரசியல் விமர்சகர்கள்
லக்னோ: உத்தரப்பிரதேச அரியணையை இதுவரை தீர்மானித்துவந்த ஜாதி அடையாளம் இனி மாறும் என பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் விழும் ஓவ்வொரு வாக்கும் ஜாதியை அடிப்படையாக வைத்தே போடப்படுகிறது. அது வேட்பாளரின் ஜாதியொ அல்லது கட்சியின் ஜாதியோ, எது முதன்மையானதோ அதை தேர்ந்தெடுத்தே உத்தரப்பிரதேச மக்கள் வாக்களிக்கிறார்கள் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி, பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.

ஜாதிகள்
உத்தரப்பிரதேசத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும் ஜாதி அடிப்படையிலானது. 90% யாதவர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிப்பார்கள். 90% பிராமணர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். 90% தலித் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு செல்லும். இதுநாள் வரை இப்படித்தான் வாக்குகள் சென்றுள்ளது. எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் இதை உறுதி செய்திருக்கின்றன. ஆனால் மேல் தட்டு மக்கள் வேறு சில காரணங்களுக்காக அதை மாற்றியுள்ளனர்.

வாக்குகள்
ஜாதி அடிப்படையில் 90% மக்கள் இதுவரை வாக்களித்தார்கள். ஆனால் இம்முறை அது 60% மாறி இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை என பல பிரச்சனைகளால் மேல்தட்டு மக்கள் இம்முறை கட்சி மாறி வாக்களித்தார்கள் என தெரியவந்துள்ளது. இதற்கு முன் நடந்த தேர்தல்களில் ஜாதி பெரிய பங்காற்றி இருக்கிறதாம். ஆனால் இந்த தேர்தலில் அப்படி இல்லை.

கட்சிகள்
உத்தரப்பிரதேசத்தில் இதுவரை அனைத்து கட்சிகளும் ஜாதி ரீதியில் தான் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இந்த தேர்தலிலும் அப்படித்தான், இதற்காகவே ஜாதி தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு படை எடுத்தனர். ஆனால் அது இந்த தேர்தலில் எடுபடுமா என தெரியவில்லை. உபியில் முஸ்லீம் ஓட்டுகள் அதிகமிருக்கும் இடத்தில் பாஜகவுக்கு ஓட்டு விழாது. சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓட்டு விழும்.

மாற்றம்
அதுவே இந்த முறை முஸ்லிம் ஓட்டுகள் இருக்கும் இடத்தில் பாஜக நன்றாக வாக்கு வாங்கும். அதுவே சமாஜ்வாதி வாக்கு வாங்காது. மாநிலம் முழுவதும் இதுபோன்ற மாற்றங்கள் ஆங்காங்கே நடந்துள்ளது. சில முஸ்லிம் இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியைவிடவும் பாஜக அதிக வாக்கு வாங்கும். இதுதான் ஜாதி அடிப்படையில் இனி அணுக முடியாது என்பதற்கு உதாரணம்.

வாக்கு வங்கி
இதனால் தங்கள் கட்சிக்கான வாக்கு வங்கி என நினைத்த அனைத்து கட்சிகளும், பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். இதனால் 4-5% வாக்குகள் அதிகரிக்கும் அல்லது குறையும். நகரம், கிராமம், யாதவ், தலித், பிராமணர்கள் என எல்லா இடத்திலும் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஜாதியைத் தாண்டி வாக்களிக்கும்முறை அதிகரித்து வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications