பெண்களுக்கு எதிரான குற்றம், போலி என்கவுண்டர்.. உபி. எதில் முதலிடம்.. பட்டியலிடும் அகிலேஷ் யாதவ்
லக்னோ: பெண்களுக்கு எதிரான குற்றம், போலி என்கவுண்டர்கள் இதிலெல்லாம் உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பட்டியலிட்டுத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேசம் நாட்டிலேயே சிறப்பாக விளங்குவதாக பிரதமர் மோடியு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
ஆனால், பிரதமர் சொல்வது உண்மையில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புள்ளிவிபரங்களுடன் உத்தரப்பிரதேசம் குறித்து பட்டியலிட்டுள்ளார்.

பாஜக
உத்தரப்பிரதேசத்தில் தற்போது குற்றங்கள் குறைந்திருக்கிறது. அங்கிருந்த குண்டர்கள் மற்றும் மாஃபியாக்கள் இப்போது சிறையில் இருக்கிறார்கள். இங்கிருந்த மாஃபியாக்களை சமாஜ்வாதி கட்சி காப்பாற்றி வருகிறது என பாஜக குற்றம் சாட்டியது. சமாஜ்வாதி வேட்பாளர்கள் பலர் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் என பாஜக புகார் எழுப்பியது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் சமாஜ்வாதி கட்சியை குண்டர்கள் போல் சித்தரித்து பிரசாரம் செய்தனர்.

அகிலேஷ் யாதவ்
இந்நிலையில், பிரதமர் மற்றும் பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புள்ளிவிபரங்களுடன் பதிலளித்துள்ளார். பொய்களை முன்னிறுத்தியே பாஜக பிரசாரம் செய்கிறது. உத்தரப்பிரதேசம் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் முதலிடத்தில் இருக்கிறது, கஸ்டடி இறப்புகளில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது.

முதலிடம்
மனித உரிமை ஆணையத்திடம் இருந்து அதிக நோட்டீஸ் உத்தரப்பிரதேச அரசுக்குத்தான் வந்திருக்கிறது, போலி என்கவுண்டர்களில் உத்தரப்பிரதேசம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இது எல்லாம் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் சொல்லும் தகவல். எங்கேயாவது ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி காணாமல் போய் பார்த்திருக்கிறீர்களா, இதையெல்லாம் பாஜக செய்துவிட்டு சமாஜ்வாதி மீது குற்றம் சுமத்துகிறது பாஜக.

வன்முறை
ஹத்ராவில் நடந்ததை எப்படி மறக்க முடியும். ஹத்ரா பிரச்சனையை கொண்டுவந்தது இந்த போலீஸும் உபி அரசும் தான். லக்கிம்பூர் பிரச்சனை, லக்னோவில் ஆப்பிள் ஊழியருக்கு நடந்தது, கோரக்பூரில் தொழிலதிபர் அடித்துக்கொல்லப்பட்டது, இதெல்லாம் எனக்கும் மக்களுக்கும் நன்றாக நினைவிருக்கிறது. இதை செய்தது யார் என்று எல்லாருக்கும் தெரியும். யாரும் மறக்கமாட்டார்கள்.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது, இரண்டாம் கட்ட தேர்தல் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் பெரிய கூட்டணிகள் இல்லாமல் மோதுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications