பாஜக கொடியோடு பறந்த கார், மடக்கிய மதுரை போலீஸ்! உள்ளே பார்த்தா 11 பேர் தேடப்படும் குற்றவாளிகள்! ஷாக்
மதுரை: உசிலம்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தேடபட்டு வந்த குற்றவாளிகள் பாஜக கொடியுடன் இருந்த காரில் தப்பி செல்ல முயன்ற போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கபடி போட்டி நடைபெற்று இருக்கிறது.
இந்த கபடி போட்டியின் காரணமாக எம்.எஸ்.புரம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் மெய்யனுத்தம்பட்டியைச் சேர்ந்தவர்களுக்கும் முன் விரோதம் ஏற்பட்டு உள்ளது.

16 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் கபடிப் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக எம்.எஸ்.புரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயன், ராஜ்குமார் ஆகிய இளைஞர்கள் மீது மெய்யனுத்தம்பட்டியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கின்றன. இந்த தாக்குதல் தொடர்பாக எம்.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலிசுக்கு கிடைத்த ரகசிய தகவல்
வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாகினர். இதனை அடுத்து அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்தான் பேரையூரைச் சேர்ந்த பாஜக முன்னாள் பிரமுகர் சாமிநாதன் என்பவரது காரில் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் தப்பி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பாஜக கொடியுடன் வந்த கார்
அதன் அடிப்படையில் அவர்களை மொத்தமாக தடுத்து நிறுத்தி கைது செய்ய போலீசார் விரைந்தனர். உசிலம்பட்டி தேவர் சிலை முன்பாக பாஜக கொடி மற்றும் பெயர் அச்சிடப்பட்டு இருந்த கார் வேகமாக செல்வதை கண்ட உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான தனிப்படை போலீசார் அதனை மடக்கி பிடித்தனர்.

11 பேர் கைது
அந்த காரில், எம்.எஸ்.புரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய திருநங்கை ஹன்சிகா, சதீஸ்குமார், ஆதிஸ்வரன், முத்துக் கிருஷ்ணன், செல்வம் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட தேவர் சிலை பகுதியில் பாஜக கொடி மற்றும் பெயர் போர்டுடன் வந்த காரை மடக்கி குற்றவாளிகளை போலீசார் கைது செய்த சம்பவம் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications