மதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்
மதுரை: மதுரை மாவட்டத்தில், ஒரே நாளில் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த ஒரு வாரத்தில் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக குறைந்து வரும் மதுரையில் தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக சீராக அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
செப் .16 அன்று 17 ஆகவும், செப் .17 அன்று 20 ஆகவும், செப் .18 அன்று 15 ஆகவும், செப் .19 அன்று 14 ஆகவும் தினசரி கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் செப்டம்பர் 20 அன்று 27 ஆக உயர்ந்தது.
செப் .21 அன்று 21 ஆகவும், 22 ஆம் தேதி, 23 பேர் ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்தது.

எப்படி இருக்கிறது
மதுரையில் செப்டம்பர் 23ம் தேதி 7351 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 0.4 சதவீதம் என்கிற அளவிற்கு பாதிப்பு உள்ளது. கொரோனா இரண்டாவது அலையால் மதுரையில் இதுவரை 53,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 52,179 பேர் குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு அதிகம்
கொரோனா இரண்டாவது அலையில் மட்டும் 713 பேர் இறந்துள்ளனர். மதுரையில் இரண்டு அலையிலும் சேர்த்து இதுவரை 74445 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 73026 பேர் குணம் அடைந்தனர். இரண்டு அலையிலும் சேர்த்து இதுவரை 1163 பேர் உயிரிழந்துள்ளனர்.

மக்கள் உணரணும்
கொரானாவிற்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட மக்களும் கொரோனா ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்பின் அதிகரிப்பு மூன்றாவது அலையின் தாக்கத்தை உணரத் தொடங்கியுள்ளதாகவும், மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பு விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்காணிக்க கோரிக்கை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் 100 வார்டுகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், வழிகாட்டுதல்களை கண்காணிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோவை, சென்னை, ஈரோட்டில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் கோவை, தஞ்சை, கிருஷ்ணகிரியில் பாதிப்பு சதவீதம் 2 சதவீதம் அளவிற்கு உள்ளது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications