Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத வேற ஞாபகப்படுத்திட்டீங்க! வைகை அணையில் தெர்மாக்கோல்! காரணம் யாரு தெரியுமா? உடைத்த செல்லூர் ராஜு!

Subscribe to Oneindia Tamil

மதுரை : அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுகவில் தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க மாவட்ட செயலாளர்களில் ஒருவருமான செல்லூர் ராஜு, வைகை அணையின் தண்ணீர் ஆவியாவதை தவிர்க்க 'வரலாற்று சிறப்பு மிக்க சம்பவமான' தெர்மக்கோலை வைத்து மூடியதற்கு காரணம் யார்? இந்த ஐடியாவைக் கொடுத்தது யார்? நீண்ட காலத்துக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளார்.

அதிமுகவின் அதிகார யுத்தம் காரணமாக ஓபிஎஸ் இபிஎஸ், மற்றும் சீனியர்கள் அமைச்சர்கள் எப்போதும் பரபரப்போடும் சில நேரங்களில் ஆவேசமாகவும் பேசி வருகின்றனர்.

அதற்கெல்லாம் நேர்மாறாக இருப்பவர் செல்லூர் ராஜு. அதிமுகவின் கடைக்கோடி தொண்டனாக இருந்து .மாவட்ட செயலாளர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். ஆனாலும் மனதில் எது தோன்றினாலும் அதை பட்டென்று பேசிவிடுவார்.

செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

'தெர்மாகோல் விஞ்ஞானி' என நெட்டிசன்களால் அன்போடு அழைக்கப்படும் செல்லு ராஜு அந்த பெயரை பெற்றது. எதற்காக என்பது பலருக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் அதை நினைவு படுத்த வேண்டியது நமது கடமை. இந்த பெயருக்கு பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. வைகை அணையில் நீர் அதிக அளவில் ஆதியாவதால் அதை தடுக்க வேண்டும் ஏதாவது திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என தேனி மதுரை மாவட்ட ஆட்சியர்களிடமும் பொறியாளர்களிடமும் கேட்டிருக்கிறார் செல்லூர் ராஜு.

வைகை அணை

வைகை அணை

இதை அடுத்து அவர்கள் கொடுத்த ஐடியாவின் படி அதிகாரிகள் புடை சூழ வைகை அணைக்கு சென்ற அவர் வெள்ளை நிற தெர்மாகோல், அதில் கல்லை கட்டி வைகை அணை நீர் ஆவியாவதை தடுக்க போகிறேன் என மிதக்க விட்டார். ஆனால் அவர் கரை சேரும் முன் தெர்மாகோல் அனைத்தும் கரை சேர்ந்து விட்டது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் கேலிக்குள்ளான செல்லூர் ராஜ் அதன் பிறகு தெர்மாகோல் விஞ்ஞானி என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

தெர்மாகோல் திட்டம்

தெர்மாகோல் திட்டம்

செல்லூர் ராஜூவின் திட்டம் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் தெர்மாகோலை வைத்து எதுவும் செய்ய முடியாது. வெளிநாடுகளில் நீர் நிலைகளில் நீர் ஆவியாவதை தடுக்க 'பிளாக் பால் டெக்னாலஜி' அல்லது சோலார் பேனல் அமைப்பது போன்ற திட்டங்களை கொண்டு வருகின்றனர். ஆனால் தெர்மாகோல் என்பது கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் அப்போது இதற்கு காரணம் யார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. அப்போது தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடாசலம் 'அமைச்சர்' தான் ஐடியா கொடுத்தார் என பேசி இருந்தார்.

யார் காரணம்

யார் காரணம்

இதைத் தொடர்ந்து தற்போது வரை அமைச்சர் செல்லூர் ராஜு என்றாலே காமெடி சரவெடி தான். ஏதாவது ஒரு வகையில் சச்சையான விஷயத்தைக் கூட காமெடி கலந்து பேசிவிட்டு சிரித்த முகத்தோடு சென்று விடுவார். இந்த நிலையில் தான் தெர்மாகோல் ஐடியாவை தனக்கு கொடுத்தது யார் என்பது குறித்து மனம் திறந்து இருக்கிறார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,"ஒரு அரசு பொறியாளர் பேச்சை கேட்டு வைகை அணையில் தெர்மாக்கோல் விடப்பட்டது; இந்நிகழ்வுக்கு பின் சட்டப்பேரவையில் கூட என்னை தெர்மாக்கோல் ராஜு என கூப்பிட்டார்கள்"என கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+