துரோகி இபிஎஸ் விசுவாசி ஓபிஎஸ்..முழுவேகத்துடன் களமிறங்கிய முக்குலத்தோர்! முதல்வருக்கு பறந்த கோரிக்கை!
மதுரை : ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் புயலாக வீசி வரும் நிலையில், ஜீலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என முக்குலத்தோர் அமைப்பின் சார்பில் ஓபிஎஸுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாருமண்டபத்தில் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக பேசினார்.

ஒற்றைத்தலைமை விவகாரம்
ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக பொதுக்குழுவில் கூடியிருந்த உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து பாதியிலேயே ஒ.பன்னீர்செல்வம் தரப்பினர் வெளியேறிய போது அவர் மீது காகிதங்களையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்த முயற்சி நடைபெற்றது.

ஓபிஎஸ்க்கு ஆதரவு
மேலும் ஓ.பன்னீர்செல்வம் வந்த வாகனம் பஞ்சர் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை பலரும் கண்டித்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக குறிப்பிட்ட சமுதாய அமைப்புகளும், அதிமுக தொண்டர்களும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் முக்குலத்தோர் உறவின்முறை சங்கம் சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நன்றி மறந்த எடப்பாடி
அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவமானப்படுத்தி, சபை நாகரீகம் தெரியாத நன்றி மறந்த எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி தொடர்ந்து வன்முறை தூண்டுதலுடன் பேசி ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான ஓபிஎஸ்சை பொதுக்குழு கூட்டத்தில் தண்ணீர் பாட்டிலை எறிந்தும், வாகனத்தை சேதப்படுத்திய ரவுடி கும்பலை வன்மையாக கண்டிப்பதாக கூறப்பட்டுள்ளது.

முதல்வருக்கு கோரிக்கை
மேலும் எடப்பாடி ஆதரவாளர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழ கூட்டத்தில் வன்முறையை தூண்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட தி்ட்டமிட்டிருப்பதாலும், கொரோனா பரவும் அபாயகரமான காலகட்டத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை தமிழக முதல்வரும், காவல்துறை தலைவரும் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா?












Click it and Unblock the Notifications