மத்திய சிறை இடத்தில் அமையும் செம்மொழி பூங்கா.. மதுரை மக்களுக்கு வந்த குட் நியூஸ்!
மதுரை: மதுரை மத்திய சிறை மாற்றப்படுவதால், நகரின் மையத்தில் உள்ள 31 ஏக்கர் இடத்தில் செம்மொழி பூங்கா பிரம்மாண்டமாக அமைய உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கோவையிலும் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி செலவில் 45 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. இந்த செம்மொழி பூங்காவில் பல்வேறு வகையான செடிகள், மரங்கள், தோட்டம், உடற்பயிற்சி கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டுகளிக்க ஏராளமான பொதுமக்கள் ஒவ்வொரு வாரமும் வருகின்றனர். காலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த இடமாகவும் இது அமைந்திருக்கிறது. இதன் காரணமாக மதுரையிலும் செம்மொழி பூங்கா அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
மதுரை மத்திய சிறை மாற்றப்படுவதால், நகரின் மையத்தில் உள்ள இடம் செம்மொழி பூங்காவாக மாற்றம் செய்யப்பட உள்ளது. மதுரை மத்திய சிறையில் இட நெருக்கடி அதிகரித்துள்ளதால், மேலூரில் 89 ஏக்கரில் மத்திய மத்திய சிறைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.220 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய சிறை இடம் காலியாக இருக்கும் நிலை வந்தது.
இப்படியான சூழலில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பாக செம்மொழி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு தகுதியான ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க மாநகராட்சி ஒப்புதல் கோரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக மதுரையில் பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
அதற்கேற்ப நகரின் முக்கியமான இடத்தில் உள்ளூர் மக்களின் வசதிக்கு ஏற்ப செம்மொழி பூங்கா அமைக்கப்பட இருப்பது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறை வளாக கட்டுமான பணிகள் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும் நிலையில், செம்மொழி பூங்கா பணிகள் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகலாம் என்று கருதப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பின் மதுரை அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டி வருகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு மைதானம், கீழடி அருங்காட்சியம், வேலு நாச்சியார் மேம்பாலம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளது. டைடல் பார்க் முதற்கட்ட வளாகம் ஜூலை மாதத்தில் முடிவடைய உள்ளது. அதேபோல் கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளும் சுமார் 75 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. தற்போது செம்மொழி பூங்கா அமைக்கப்பட இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு











Click it and Unblock the Notifications