பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கலாய்த்த செல்லூர் ராஜூ.. அதிரடி பேட்டி
மதுரை: வெள்ளை அறிக்கையை விளம்பரத்துக்காக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை அறிக்கையை வெடி குண்டு என நினைத்து வெளியிட்டார்கள். ஆனால் அது புஷ்வானமாகிவிட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேசியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்க மதுரை மண்டலத்திற்கான மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான வேட்புமனு தாக்கல் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் துவங்கியது.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜு, மற்றும் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒன்றும் செய்யமுடியவில்லை
இதில் கலந்தது கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், அதிமுகவில் பதவி, பணம் சம்பாதித்தவர்களே தற்போது திமுகவில் இணைந்து வருகிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவினர் தங்களுடைய திமுக கரை வேஷ்டியை பெட்டியில் வைத்து பூட்டி விட்டார்கள்
அதிமுகவை கருணாநிதியாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை

வெடிகுண்டு
நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையை விளம்பரத்துக்காக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை அறிக்கையை வெடி குண்டு என நினைத்து வெளியிட்டார்கள் ஆனால் அது புஷ்வானமாகிவிட்டது. 2026 ஆம் ஆண்டிற்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம். அப்போது அதிமுக ஆட்சிக்கு வரும்" இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்

பொருளாதாரம் தெரியவில்லை
பின்னர் பேசிய முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு சமூக பொருளாதாரம் தெரியவில்லை. வரவு செலவு, லாபம் நஷ்டத்தை பற்றியே பேசி வரும் நிதி அமைச்சர் சமூக சேவை குறித்தும் சிந்திக்க வேண்டும்
வெள்ளை அறிக்கையில் ஒரு உள் அறிக்கை உள்ளது

சேவைத் துறை
2011 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆதி திராவிடர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை, கலர் டி.விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை ஏன் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடவில்லை. வெள்ளை அறிக்கையின் வாயிலாக தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை என திமுக தெரிவித்துள்ளது. சேவைத் துறையின் பற்றாக்குறையை எப்படி நஷ்டம் என கூற முடியும்

கடன் சுமை
அரசின் செயலாளரை அருகில் வைத்து கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைச்சர் அறிக்கைக்கு தான் பொறுப்பு என ஏன் கூற வேண்டும் . நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு அரசின் சார்பில் பொறுப்பேற்க வேண்டும். மக்களுக்கான திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தியுள்ளதால் கடன் சுமை கூடியுள்ளது. பிற மாநிலங்களில் இல்லாத திட்டங்களை அதிமுக 10 ஆண்டுகளாக செயல்படுத்தி உள்ளது
அரசின் மீது கடன் சுமை இல்லை என்றால் மக்கள் மீது கடன் சுமை கூடியிருக்கும் . மக்களை திசை திருப்ப வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை என்பது வெற்று அறிக்கையாக உள்ளது" இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications