Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தப்பு செய்தது அவர்.. தண்டனை இவருக்கா.. இந்திய அணியில் கோலி எடுக்கும் முடிவு... இதெல்லாம் சரியா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    2nd Test போட்டியில் களமிறங்க காத்திருக்கும் KS Bharat.. Wriddhiman Saha நிலை என்ன?

    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையில் இந்திய அணி ஆடியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கடைசி ஒரு விக்கெட்டை இந்திய அணி வீழ்த்த முடியாமல் போனதால் ஆட்டம் டிரா ஆனது.

    இந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்திற்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறார். இரண்டாவது ஆட்டத்தில் கோலி கேப்டனாக களமிறங்க உள்ளார்.

    பேட்டி

    பேட்டி

    இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் குறித்து பேட்டி அளித்த கோலி, எனக்கு எப்போதும் மும்பை வான்கடே மைதானம் பிடிக்கும். அங்கு நான் சிறப்பான ஆட்டங்களை ஆடி இருக்கிறேன். இந்திய அணிக்கு இந்த பிட்ச் எப்போதும் உதவிகரமாக இருந்துள்ளது. சாகா இப்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறார்.

    கழுத்து

    கழுத்து

    அவருக்கு கழுத்தில் இருந்த பிடிப்பு சரியாகிவிட்டது. ஆடும் 11 பேர் கொண்ட அணி குறித்து ஆலோசிக்க வேண்டும். மும்பை வானிலை இதில் முக்கிய பங்கு வகிக்கும். வானிலையை பொறுத்து அதற்கு ஏற்றபடி வீரர்களை அணியில் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அணிதான் முக்கியம்.

    தெரியும்

    தெரியும்

    ஒருவரை நீக்க வேண்டும் என்றால் அதை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியது இல்லை. அதிகம் யோசிக்க வேண்டியது இல்லை. இந்திய அணியில் இருக்கும் வீரர்களுக்கும் இது தெரியும். இந்திய அணிக்கு எப்போது யார் தேவை என்பதை கருதியே அணி தேர்வு செய்யப்படும். தேவை கருதியே வீரர்கள் தேர்வு நடக்கும். இதை அணியில் இருக்கும் எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்று கோலி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    சாகா வருகிறார்

    சாகா வருகிறார்

    சாகா கழுத்து பிரச்சனை சரியாகிவிட்டாலும் அவர் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகம்தான். கே எஸ் பரத் கீப்பிங் சிறப்பாக உள்ளது. சாகாவிற்கும் வயதாகிவிட்டதால் அடுத்த ஒரு போட்டியில் கே.எஸ் பரத்திற்கு வாய்ப்பு கொடுத்து சோதனை செய்து பார்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில வருடங்களாகவே கே. எஸ் பரத் லோக்கல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

    மாற்றம்

    மாற்றம்

    அதேபோல் கோலி வருவதால் இன்னொரு வீரரை தூக்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடி வருகிறார் என்பதால் அவரை நீக்க முடியாது. பார்ம்படி பார்த்தால் ரஹானேவைதான் நீக்க வேண்டும். ஆனால் அவர் மோசமான பார்மில் இருந்தாலும் நீக்கப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். மாறாக கோலி வருகையை முன்னிட்டு ஓப்பனர் மயங்க் அகர்வால் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    நீக்கம்

    நீக்கம்

    மயங்க் அகர்வால் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் நியூசிலாந்து தொடரில்தான் ஓப்பனிங் வாய்ப்பு பெற்றார். ஆனால் ஒரே போட்டியில் அவரின் வாய்ப்பு பறிக்கப்பட உள்ளது. மாறாக ரஹானே பல போட்டிகளாக மோசமாக ஆடி வரும் நிலையிலும் அவர் நீக்கப்பட வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

    கேள்வி

    கேள்வி

    ரஹானேதான் சரியாக ஆடாமல் தவறு செய்தார். ஆனால் அவரை நீக்காமல் இந்திய அணி மயங்க் அகர்வாலை நீக்க போகிறதா .. ரஹானேவிற்கு எத்தனை வாய்ப்புதான் கொடுக்கப்படும் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். பெரும்பாலும் இரண்டாவது டெஸ்டில் மயங்க் ஆட வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். இதனால் ரஹானேவிற்கு ஒரு விதி மயங்க் அகர்வாலுக்கு ஒரு விதியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+