தப்பு செய்தது அவர்.. தண்டனை இவருக்கா.. இந்திய அணியில் கோலி எடுக்கும் முடிவு... இதெல்லாம் சரியா?
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையில் இந்திய அணி ஆடியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கடைசி ஒரு விக்கெட்டை இந்திய அணி வீழ்த்த முடியாமல் போனதால் ஆட்டம் டிரா ஆனது.
இந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்திற்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறார். இரண்டாவது ஆட்டத்தில் கோலி கேப்டனாக களமிறங்க உள்ளார்.

பேட்டி
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் குறித்து பேட்டி அளித்த கோலி, எனக்கு எப்போதும் மும்பை வான்கடே மைதானம் பிடிக்கும். அங்கு நான் சிறப்பான ஆட்டங்களை ஆடி இருக்கிறேன். இந்திய அணிக்கு இந்த பிட்ச் எப்போதும் உதவிகரமாக இருந்துள்ளது. சாகா இப்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறார்.

கழுத்து
அவருக்கு கழுத்தில் இருந்த பிடிப்பு சரியாகிவிட்டது. ஆடும் 11 பேர் கொண்ட அணி குறித்து ஆலோசிக்க வேண்டும். மும்பை வானிலை இதில் முக்கிய பங்கு வகிக்கும். வானிலையை பொறுத்து அதற்கு ஏற்றபடி வீரர்களை அணியில் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அணிதான் முக்கியம்.

தெரியும்
ஒருவரை நீக்க வேண்டும் என்றால் அதை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியது இல்லை. அதிகம் யோசிக்க வேண்டியது இல்லை. இந்திய அணியில் இருக்கும் வீரர்களுக்கும் இது தெரியும். இந்திய அணிக்கு எப்போது யார் தேவை என்பதை கருதியே அணி தேர்வு செய்யப்படும். தேவை கருதியே வீரர்கள் தேர்வு நடக்கும். இதை அணியில் இருக்கும் எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்று கோலி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சாகா வருகிறார்
சாகா கழுத்து பிரச்சனை சரியாகிவிட்டாலும் அவர் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகம்தான். கே எஸ் பரத் கீப்பிங் சிறப்பாக உள்ளது. சாகாவிற்கும் வயதாகிவிட்டதால் அடுத்த ஒரு போட்டியில் கே.எஸ் பரத்திற்கு வாய்ப்பு கொடுத்து சோதனை செய்து பார்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில வருடங்களாகவே கே. எஸ் பரத் லோக்கல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

மாற்றம்
அதேபோல் கோலி வருவதால் இன்னொரு வீரரை தூக்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடி வருகிறார் என்பதால் அவரை நீக்க முடியாது. பார்ம்படி பார்த்தால் ரஹானேவைதான் நீக்க வேண்டும். ஆனால் அவர் மோசமான பார்மில் இருந்தாலும் நீக்கப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். மாறாக கோலி வருகையை முன்னிட்டு ஓப்பனர் மயங்க் அகர்வால் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

நீக்கம்
மயங்க் அகர்வால் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் நியூசிலாந்து தொடரில்தான் ஓப்பனிங் வாய்ப்பு பெற்றார். ஆனால் ஒரே போட்டியில் அவரின் வாய்ப்பு பறிக்கப்பட உள்ளது. மாறாக ரஹானே பல போட்டிகளாக மோசமாக ஆடி வரும் நிலையிலும் அவர் நீக்கப்பட வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

கேள்வி
ரஹானேதான் சரியாக ஆடாமல் தவறு செய்தார். ஆனால் அவரை நீக்காமல் இந்திய அணி மயங்க் அகர்வாலை நீக்க போகிறதா .. ரஹானேவிற்கு எத்தனை வாய்ப்புதான் கொடுக்கப்படும் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். பெரும்பாலும் இரண்டாவது டெஸ்டில் மயங்க் ஆட வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். இதனால் ரஹானேவிற்கு ஒரு விதி மயங்க் அகர்வாலுக்கு ஒரு விதியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications