இந்தியாவில் புதிதாக 21 பேருக்கு ஓமிக்ரான் உறுதி...பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் நாட்டில் இதுவரை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாக 8 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. நாட்டில் இதுவரை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    ஓமைக்ரான் தாக்கம் எதிரொலி: வெளிநாட்டுப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!

    தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது.
    தற்போது 77 நாடுகளில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் டெல்டா வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Omicron confirms 21 new entrants in India - total vulnerability rises to 61

    இந்தியாவில் கடந்த வாரம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. திங்கட்கிழமை இரவு வரை 40 ஆக இருந்த தேசிய அளவிலான ஓமிக்ரான் பாதிப்பு தற்போது வரை 61 ஆக உயர்ந்துள்ளது. இதிலும் மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாக 8 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியானதால், அந்த மாநிலத்தில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

    புதிதாக ஓமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட 8 பேரும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. லண்டன் சென்று திரும்பிய ஒருவருடன் தொடர்பில் இருந்ததாலேயே இவர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 8 பேரில் ஒருவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர். தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. 5 பேருக்கு மட்டும் லேசான அறிகுறிகள் இருப்பதாக மராட்டிய மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    ராஜஸ்தானில் இதுவரை 17 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. டெல்லியில் 6 பேருக்கும், குஜராத்தில் 4 பேருக்கும், கர்நாடகாவில் 3, ஆந்திரபிரதேசம் , சண்டிகர் மற்றும் கேரளாவில் தலா ஒருவருக்கும் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+