Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒற்றை படத்தில் தெரிந்த வலி.. சிறுவர்கள் தோளில் தொங்கிய ராகுல்! ஒற்றுமை யாத்திரைக்கு ஓடி வரும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை அங்கு வந்த 2 சிறுவர்களின் தோள் மீது கைபோட்டு தொங்கியபடி நிற்கும் புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை பாஜக அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் 2 மாதத்திற்கு முன் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி செப்டம்பர் 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு சென்றடைந்தார்.

தமிழ்நாடு, கேரளா

தமிழ்நாடு, கேரளா

ராகுல் காந்தியின் யாத்திரை தமிழ்நாட்டில் தொடங்கி கேரளாவில் 18 நாட்கள் நடந்து வந்த ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தார். அங்கிலிருந்து கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்த அவர், அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டார்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கர்நாடகாவில் இவர் நடைபயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வாக்கை செலுத்தினார்.

தெலுங்கானா

தெலுங்கானா

கர்நாடகா மாநிலத்தில் நடைபயணத்தை முடித்துக்கொண்டு தெலுங்கானா மாநில எல்லைக்குள் ராகுல் காந்தி நுழைந்தார். அம்மாநிலத்தின் முக்கிய மாவட்டங்கள் வழியாக சென்று பல தரப்பட்ட மக்களை சந்தித்து பேசியனார். 15 நாட்கள் தெலுங்கானாவில் நடைபயணம் சென்ற ராகுல் காந்தியுடன் தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

கடந்த 7 ஆம் தேதி நடைபயணத்தின் 60 வது நாளை நிறைவு செய்த ராகுல் காந்தி, தெலுங்கானா நடைபயணத்தை முடித்துக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சென்றார். அவருக்கு செல்லும் வழியெங்கும் அம்மாநில காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முதியவர்

முதியவர்

இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெத் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்திக்கு அப்பகுதி மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். முதியவர் ஒருவரின் தோளில் கைபோட்டு ராகுல் காந்தி பேசிக்கொண்டே வரும் படம் ஒருபக்கம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

சிறுவர்கள்

சிறுவர்கள்

அதேபோல், 2 சிறுவர்களுடன் டேபில் எதையோ பார்த்தபடி நடந்து சென்ற் ராகுல் காந்தி, அதே சிறுவர்களின் தோளில் தனது 2 கைகளையும் போட்டுக்கொண்டு தொங்கியபடி நிற்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் வலியை அந்த புகைப்படம் காட்டுவதாக பலர் கருத்திட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+