மும்பையை யூனியன் பிரதேசமாக்க பாஜக சதி? பகீர் புகார் கூறும் சஞ்சர் ராவத்! பின்னணியில் பெரிய பில்டர்?
மும்பை
மும்பை : மும்பையை யூனியன் பிரதேசமாக்க பாஜக சதி செய்கிறது எனவும், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறியுள்ளது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு நிலமோசடி செய்ததாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு தொடர்பு இருப்பதாகவும், இதனால் இந்த வழக்கு தொடர்பாக அவரது சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடக்கியது.

சிவசேனா சஞ்சய் ராவத்
1,034 கோடி பத்ரா சால் நில ஊழல் வழக்கில் அவருக்கு தொடர்புடைய சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் முடக்கியதை அடுத்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சஞ்சய் ராவத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தான் மும்பையை யூனியன் பிரதேசமாக்க பாஜக சதி செய்கிறது எனவும், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

பாஜக மீது புகார்
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்பி கிரித் சோமையா மற்றும் அந்த கட்சித் தலைவர்கள், மும்பையின் பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அடங்கிய குழு இந்த சதியில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவோடு அடிக்கடி முரண்பட்ட கருத்து மோதல்களில் ஈடுபட்டு வரும் ராவத், நாட்டின் நிதித் தலைநகரை யூனியன் பிரதேசம் ஆக்குவதற்காக முன்னேற்பாடுகள் நடத்தப்படுவதாகவும், பாஜக தலைவர் கிரித் சோமையா தலைமையில் இந்த சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சதி திட்டம்
பிரபல செய்தி நிறுவனமான ANI இடம் பேசிய அவர், "மும்பையை மத்திய அரசால் ஆளக்கூடிய நகரமாக மாற்றுவதற்காக நிதியுதவி செய்த ஒருவர் மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய பில்டர் எனவும், வாரணாசியைச் சேர்ந்த ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளார். முழு சதித்திட்டமும் கிரித் சோமையா தலைமையில் நடக்கிறது" என கூறினார். இந்த சதித்திட்டத்தை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிந்திருப்பதாகவும், அடுத்த சில மாதங்களில், மும்பையில் மராத்தி மக்களின் சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறி மும்பை மாநகரை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என சோமையா தலைமையிலான குழு நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் ராவத் மேலும் கூறினார்.

கடும் விமர்சனம்
தனக்கு தொடர்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததையடுத்து ராவத் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக சாடியிருந்தார். தனக்கும் பிற கட்சித் தலைவர்களுக்கும் எதிரான மத்திய ஏஜென்சிகளின் சோதனைகளுக்கு தான் பயப்படவில்லை என்றும் அவர் கூறினார். ED, NCB போன்ற மத்திய ஏஜென்சிகளுக்கு முன்பாக மகாராஷ்டிரா தொடர்ந்து தலை நிமிர்ந்து நிற்கும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications