ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? 2024 லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு தலைமையா? சரத்பவார் திட்டவடட்ட மறுப்பு
மும்பை: நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட உள்ளதாக வெளியாகி வரும் செய்திகளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் அவரது ஐபேக் நிறுவனம் தொடர்பாக மட்டுமே ஆலோசனை நடத்தியதாகவும் 2024 லோக்சபா தேர்தல் குறித்தோ ஜனாதிபதி தேர்தல் பற்றியோ ஆலோசனை நடத்தவே இல்லை என சரத்பவார் விளக்கம் அளித்துள்ள்ளார்.
குஜராத்தில் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சரத்பவார் ரகசியமாக சந்தித்தார் என செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித்ஷாவும், எதையும் வெளிப்படையாக கூற முடியாது என புதிர் பேட்டி கொடுத்தார்.
அப்போதே ஜனாதிபதி தேர்தலில் சரத்பவாரை முன்னிறுத்த பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கிறதா பாஜக? என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால் சரத்பவார் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் இந்த தகவல்களுக்கு விடை கிடைக்கவில்லை.

சோனியா குடும்பம்- பி.கே. சந்திப்பு
இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் (பி.கே.) நேற்று சுமார் 2 மணிநேரம் சந்தித்து பேசினார். முதலில் இந்த சந்திப்பு பஞ்சாப் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை என கூறப்பட்டது.

பரபரத்த தகவல்கள்
பின்னர் ஜனாதிபதி தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் குறித்து விவாதித்தனர் என அடுத்த கட்டமாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்க்கும் முயற்சிகளை சோனியா குடும்பம் மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் பரபரத்தன.

சரத்பவார் தூதரா?
இன்னொரு பக்கம், பாஜக- காங்கிரஸ் ஆதரவுடன் சரத்பவார் ஜனாதிபதியாக விரும்புகிறார்; இதற்காகவே பிரசாந்த் கிஷோரை தூதராக அனுப்பி வைத்துள்ளார் என்றும் தகவல்கள் ரெக்கை கட்டின. இப்படி சரத்பவாரை மையமாக வைத்து நேற்று முதல் இடைவிடாமல் பல்வேறு யூகச் செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

சரத்பவார் திட்டவட்ட மறுப்பு
இந்த நிலையில் இவை அனைத்துக்கும் சரத்பவார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடப் போகிறேன் என்கிற தகவலில் உண்மையே இல்லை. 300 எம்.பி.க்களை கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு எதிராக போட்டியிட்டால் என்ன முடிவுகள் வரும் என எனக்கு நன்றாகவே தெரியும். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் நான் இல்லவே இல்லை.

பி.கேவுடன் பேசியது இதுதான்!
பிரசாந்த் கிஷோர் என்னை 2 முறை சந்தித்து பேசினார். அப்போது அவரது ஐபேக் நிறுவனம் தொடர்பாக மட்டுமே பேசினோம். 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி தலைமை குறித்தோ ஜனாதிபதி தேர்தல் குறித்தோ நாங்கள் எதுவுமே பேசவே இல்லை. தேர்தல் வியூகப் பணிகளில் இருந்து தாம் விலகிவிட்டதாகவே என்னிடம் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

கூட்டணி தலைவரும் இல்லை
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னமும் காலம் இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மாறக் கூடும். 2024 லோக்சபா தேர்தலுக்கான எந்த கூட்டணிக்கும் நான் தலைமை ஏற்கப் போவதும் இல்லை. இவ்வாறு சரத்பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications