Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? 2024 லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு தலைமையா? சரத்பவார் திட்டவடட்ட மறுப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட உள்ளதாக வெளியாகி வரும் செய்திகளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் அவரது ஐபேக் நிறுவனம் தொடர்பாக மட்டுமே ஆலோசனை நடத்தியதாகவும் 2024 லோக்சபா தேர்தல் குறித்தோ ஜனாதிபதி தேர்தல் பற்றியோ ஆலோசனை நடத்தவே இல்லை என சரத்பவார் விளக்கம் அளித்துள்ள்ளார்.

குஜராத்தில் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சரத்பவார் ரகசியமாக சந்தித்தார் என செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித்ஷாவும், எதையும் வெளிப்படையாக கூற முடியாது என புதிர் பேட்டி கொடுத்தார்.

அப்போதே ஜனாதிபதி தேர்தலில் சரத்பவாரை முன்னிறுத்த பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கிறதா பாஜக? என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால் சரத்பவார் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் இந்த தகவல்களுக்கு விடை கிடைக்கவில்லை.

சோனியா குடும்பம்- பி.கே. சந்திப்பு

சோனியா குடும்பம்- பி.கே. சந்திப்பு

இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் (பி.கே.) நேற்று சுமார் 2 மணிநேரம் சந்தித்து பேசினார். முதலில் இந்த சந்திப்பு பஞ்சாப் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை என கூறப்பட்டது.

பரபரத்த தகவல்கள்

பரபரத்த தகவல்கள்

பின்னர் ஜனாதிபதி தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் குறித்து விவாதித்தனர் என அடுத்த கட்டமாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்க்கும் முயற்சிகளை சோனியா குடும்பம் மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் பரபரத்தன.

சரத்பவார் தூதரா?

சரத்பவார் தூதரா?

இன்னொரு பக்கம், பாஜக- காங்கிரஸ் ஆதரவுடன் சரத்பவார் ஜனாதிபதியாக விரும்புகிறார்; இதற்காகவே பிரசாந்த் கிஷோரை தூதராக அனுப்பி வைத்துள்ளார் என்றும் தகவல்கள் ரெக்கை கட்டின. இப்படி சரத்பவாரை மையமாக வைத்து நேற்று முதல் இடைவிடாமல் பல்வேறு யூகச் செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

சரத்பவார் திட்டவட்ட மறுப்பு

சரத்பவார் திட்டவட்ட மறுப்பு

இந்த நிலையில் இவை அனைத்துக்கும் சரத்பவார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடப் போகிறேன் என்கிற தகவலில் உண்மையே இல்லை. 300 எம்.பி.க்களை கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு எதிராக போட்டியிட்டால் என்ன முடிவுகள் வரும் என எனக்கு நன்றாகவே தெரியும். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் நான் இல்லவே இல்லை.

பி.கேவுடன் பேசியது இதுதான்!

பி.கேவுடன் பேசியது இதுதான்!

பிரசாந்த் கிஷோர் என்னை 2 முறை சந்தித்து பேசினார். அப்போது அவரது ஐபேக் நிறுவனம் தொடர்பாக மட்டுமே பேசினோம். 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி தலைமை குறித்தோ ஜனாதிபதி தேர்தல் குறித்தோ நாங்கள் எதுவுமே பேசவே இல்லை. தேர்தல் வியூகப் பணிகளில் இருந்து தாம் விலகிவிட்டதாகவே என்னிடம் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

கூட்டணி தலைவரும் இல்லை

கூட்டணி தலைவரும் இல்லை

2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னமும் காலம் இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மாறக் கூடும். 2024 லோக்சபா தேர்தலுக்கான எந்த கூட்டணிக்கும் நான் தலைமை ஏற்கப் போவதும் இல்லை. இவ்வாறு சரத்பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+