திடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு
மும்பை: நாடாளுமன்ற கூட்டத்தையொட்டி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சிவசேனா பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் இழுக்க முயற்சி செய்வதாகவும், அந்த கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வரும் 17ம் தேதி டெல்லியில் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி கொண்டுள்ளது சிவசேனா. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சிவசேனா பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் இன்று மும்பையில் அளித்த பேட்டியில், சிவசேனா இந்த கூட்டத்தில் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை சாம்னா, பாஜக குதிரை பேரத்தில், ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.
ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருவதால் இந்த இடைவெளியை பயன்படுத்தி கொண்டு குதிரை பேரத்தில் அந்த கட்சி ஈடுபட்டுவருகிறது. ஏற்கனவே ஆளுநர் அழைப்பு விடுத்தபோது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், ஆட்சி அமைக்க மறுப்பு தெரிவித்த பாஜக, இப்போது திடீரென தங்களால் ஆட்சி அமைக்க முடியும் எனக் கூற தொடங்கியிருப்பது குதிரை பேரத்தில் பின்னணியில்தான். பாஜகவின் பொய்கள் இப்போது அம்பலமாகி வருகின்றன என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
சுயேச்சைகள் ஆதரவுடன் தங்களிடம் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்கள் பலம் இருப்பதாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications