2005 வரலாறு திரும்புகிறது.. மும்பையில் நாளை முதல் வியாழக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு- வெதர்மேன்
Recommended Video
சென்னை: மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை 2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை நினைவுப்படுத்துகிறது. நாளையும் நாளை மறுநாளும் மும்பையில் கனமழை பெய்யக் கூடும்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பலி
இந்த மழையால் மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பிம்பிரிபடா என்ற இடத்தில் குடிசை வீடுகள் இடிந்ததில் 18 பேர் பலியாகிவுள்ளனர். இது போல் பல்வேறு காரணங்களால் மேலும் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வரலாறு
இந்த கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் கடந்த 2005-ஆம் ஆண்டு மும்பையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஒரே நாளில் பதிவான மழையின் அளவு 400 மி.மீ. ஆகும். அது போன்ற பேய் மழை இந்த முறையும் பெய்து 2005-ஆம் ஆண்டு வரலாற்றை நினைவுப்படுத்துகிறது.

பருவக்காற்று
கடந்த 2 மணி நேரமாக மழை சற்று ஓய்ந்துள்ளது. எனினும் இது மீண்டும் பெய்யும். பின்னர் மதியம் முதல் மாலைக்குள் குறையும். வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அரபிக் கடலோரத்தில் உள்ள பருவக்காற்று வலுவடைந்துள்ளது.

பிரதீப் ஜான்
இதனால் மழை அதிகமாக இருக்கிறது. எனவே நாளையும் நாளை மறுநாளும் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனது பதிவில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கடந்த 4 நாட்களில் மும்பையில் பதிவான மழையின் அளவு: கடந்த 29-ஆம் தேதி 235 மி.மீ., 30-ஆம் தேதி 93 மி.மீ., ஜூலை 1-ஆம் தேதி 92 மி.மீ., 2-ஆம் தேதி 375 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications