2005 வரலாறு திரும்புகிறது.. மும்பையில் நாளை முதல் வியாழக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு- வெதர்மேன்
Recommended Video
சென்னை: மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை 2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை நினைவுப்படுத்துகிறது. நாளையும் நாளை மறுநாளும் மும்பையில் கனமழை பெய்யக் கூடும்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பலி
இந்த மழையால் மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பிம்பிரிபடா என்ற இடத்தில் குடிசை வீடுகள் இடிந்ததில் 18 பேர் பலியாகிவுள்ளனர். இது போல் பல்வேறு காரணங்களால் மேலும் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வரலாறு
இந்த கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் கடந்த 2005-ஆம் ஆண்டு மும்பையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஒரே நாளில் பதிவான மழையின் அளவு 400 மி.மீ. ஆகும். அது போன்ற பேய் மழை இந்த முறையும் பெய்து 2005-ஆம் ஆண்டு வரலாற்றை நினைவுப்படுத்துகிறது.

பருவக்காற்று
கடந்த 2 மணி நேரமாக மழை சற்று ஓய்ந்துள்ளது. எனினும் இது மீண்டும் பெய்யும். பின்னர் மதியம் முதல் மாலைக்குள் குறையும். வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அரபிக் கடலோரத்தில் உள்ள பருவக்காற்று வலுவடைந்துள்ளது.

பிரதீப் ஜான்
இதனால் மழை அதிகமாக இருக்கிறது. எனவே நாளையும் நாளை மறுநாளும் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனது பதிவில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கடந்த 4 நாட்களில் மும்பையில் பதிவான மழையின் அளவு: கடந்த 29-ஆம் தேதி 235 மி.மீ., 30-ஆம் தேதி 93 மி.மீ., ஜூலை 1-ஆம் தேதி 92 மி.மீ., 2-ஆம் தேதி 375 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications