பர்தா அணிய மறுப்பு.. இஸ்லாமிய மத சடங்குகளை பின்பற்றாததால் மனைவி கொலை.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இஸ்லாமிய மத சடங்குகளை பின்பற்ற மறுத்ததால் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த டாக்சி டிரைவர் இக்பால் ஷேக் (வயது 36). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ருபாலி என்ற இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சாரா என்று ருபாலி மாற்றிக் கொண்டார். இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உண்டு.

இஸ்லாமிய மத சடங்குகளை..

இஸ்லாமிய மத சடங்குகளை..

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் இல்வாழ்க்கையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை. இவர்களுக்குள் கடந்த சில மாதங்களாகவே சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்துள்ளது. தனது மனைவி இஸ்லாமிய மதச்சடங்குகளை உரிய முறையில் பின்பற்றவில்லை என்ற கோபத்தில் இக்பால் ஷேக் இருந்து வந்தாராம். இது தொடர்பாக மனைவியிடம் வலியுறுத்தியும் வந்ததாக சொல்லப்படுகிறது.

பர்தா அணிய மறுப்பு

பர்தா அணிய மறுப்பு

ஆனால் இதை ஏற்க மறுத்துள்ளார் சாரா. மேலும் பர்தா அணிய முடியாது எனவும் கூறியதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால், ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக கணவன் - மனைவி இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதி தனது மனைவியை தொடர்பு கொண்ட இக்பால், இனி நாம் சேர்ந்து வாழ்வது கடினம். எனவே விவாகரத்து செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.

கடும் வாக்குவாதம்

கடும் வாக்குவாதம்

மேலும் இது தொடர்பாக நேரில் பேச வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். இக்பால் அழைப்பை ஏற்று இரவு 10 மணியளவில் சாரா அங்கு சென்று இருக்கிறார். இருவரும் சந்தித்து பேசிய போது, மகன் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று இருவரும் விடாப்படியாய் இருந்துள்ளனர். இருவரும் மாறி மாறி பேசியுள்ளனர். சிறிது நேரத்தில் இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

 கத்தியால் குத்தி கொலை

கத்தியால் குத்தி கொலை

அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற இக்பால், தனது மனைவி என்றும் பாராமல் அவரை கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். பல முறை கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த மனைவி சாரா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சிறிது நேரத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், இக்பால் மீது கொலை வழக்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய மத சடங்குகளை பின்பற்ற மறுத்ததால் மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+