Amrit Bharat Train: 17 மணி நேர பயணம்! ஆமை வேகத்தில் அம்ரித் பாரத்! நாகர்கோவில் பயணிகள் அதிருப்தி
நாகர்கோவில்: புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள நாகர்கோவில் ஜங்ஷன் - மங்களூரு ஜங்ஷன் 'அம்ரித் பாரத்' (Amrit Bharat Train) ரயில் சேவையை வரவேற்கும் அதே வேளையில், அதன் பயண நேரம் மிக அதிகமாக இருப்பதாகப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆமை வேகப் பயணம்
இதுகுறித்து தமிழ் ரயில் தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீண்ட நேரம்: சுமார் 700 கி.மீ தூரத்தைக் கடக்க இந்த ரயில் 17.2 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இது சராசரியாக மணிக்கு 40 கி.மீ வேகம் மட்டுமே.
ஒப்பீடு: 54 நிறுத்தங்களைக் கொண்ட 'பரசுராம் எக்ஸ்பிரஸ்' ரயிலை விட, வெறும் 21 நிறுத்தங்களைக் கொண்ட இந்த 'அம்ரித் பாரத்' ரயில் மெதுவாகச் செல்வது வேடிக்கையாக உள்ளதாகப் பயணிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
காத்திருப்பு: குறிப்பாக, காசர்கோடு முதல் மங்களூரு ஜங்ஷன் வரையிலான பயணத்திற்கு மட்டும் சுமார் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது (வழக்கமாக 40 நிமிடங்கள் போதும்). இதனால் பயணிகள் தேவையில்லாமல் ரயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது.
நேர அட்டவணைச் சிக்கல்
கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கத்தின் செயலாளர் பி. எட்வர்ட் ஜெனி கூறுகையில், "இந்த ரயிலின் நேர அட்டவணை இரவுப் பயணத்திற்கு ஏற்றதாக இல்லை. பகல் நேரத்தில் ஸ்லீப்பர் வசதியுடன் இயக்குவது பயணிகளுக்குப் பயனளிக்காது," என்றார்.
நாகர்கோவிலில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 11:40 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. இது மிகவும் நீண்ட பயணமாகும்.
நீட்டிப்பு கோரிக்கை (Extension Demand): இந்த ரயில் சேவையை மேலும் பயனுள்ளதாக மாற்ற, பயணிகள் இரு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:
தெற்கே: நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி (Kanniyakumari) வரை நீட்டிக்க வேண்டும்.
வடக்கே: மங்களூருவில் இருந்து கோவா (Vasco-da-Gama) அல்லது சுப்ரமணியா ரோடு (Subrahmanya Road - குக்கே சுப்ரமணியா கோயில்) வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு நீட்டிப்பதன் மூலம், கன்னியாகுமரி முதல் கோவா வரையிலான ஒரு நேரடி இணைப்பாகவும், அல்லது புகழ்பெற்ற குக்கே சுப்ரமணியா கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வசதியாகவும் இது அமையும் எனப் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தற்போது 3 அம்ரித் ரயில்கள் கிடைத்துள்ளன. திருச்சியில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு (20610) அம்ரித் பாரத் ரயில், நாகர்கோவிலில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு (20604) அம்ரித் பாரத் ரயில், தாம்பரம் - சந்திரகாச்சி வாராந்திர அம்ரித் பாரத் ரயில் (16107) ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அம்ரித் பாரத் என்றால் என்ன?
அம்ரித் பாரத் என்பது குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள் கொண்ட விரைவு ரயில்களாகும். இவை 800 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்களுக்கிடையே இயக்கப்படுகிறது.இவை கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 22 பெட்டிகளை கொண்டது. 10 படுக்கை பெட்டிகளும் 10 பொது பெட்டிகளும் இருக்கும். பார்சல்களை கொண்டு செல்ல இரு பெட்டிகளும் இருக்கும். இது மணிக்கு 110 முதல் 130 கி.மீ. வேகத்தில் செல்லும்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications