அட கொடுமையே! பாஜக நடத்திய கபடி போட்டி.. விளையாடகூட வராத அணிகள் -மணி கணக்கில் காத்திருந்த எல்.முருகன்
நாமக்கல்: பொங்கல் விழாவை முன்னிட்டு நாமக்கலில் பாஜக நடத்தப்பட்ட சார்பில் மாபெரும் மாநில அளவிலான கபடி போட்டியில் எந்த அணிகளும் விளையாட வராததால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 2 மணி நேரம் காத்திருந்தார். கடைசியில் 2 அணிகள் மட்டுமே விளையாட வந்ததால் பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
பொங்கல் விழாவை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பாக மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டியை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஈரோட்டில் நேற்று கபடி போட்டி தொடங்கியது

பொங்கல் சிறப்பு கபடி போட்டி
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான தேசிய இளைஞர் தினம் மற்றும் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பாக நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம் அலுவலகத்திற்கு முன்பு இருக்கும் மைதானத்தில் மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி விளையாட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

எல்.முருகன் தொடங்கி வைத்த போட்டி
இந்த போட்டியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்து வீரர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்து கொண்டார். இதில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த போட்டியில் முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது பரிசு ரூ 15 ஆயிரம் ரூபாயும் ரொக்க பணமும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.

விளையாட வராத அணிகள்
இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த போட்டியின் துவக்க விழாவான நேற்று முதல் போட்டியில் "செவன் வாரியஸ்" அணியும் "ராமவிலாஸ்" அணியும் போட்டியிட்டனர். இதில் ராமவிலாஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த போட்டியானது 5 மணியளவில் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விளையாட எந்த அணிகளும் வரவில்லை. அதன்பின் 7 மணியளவில் இரண்டு அணிகள் மட்டுமே வந்ததன.

காத்திருந்த எல்.முருகன்
அந்த அணிகளுக்கு இடையேயான போட்டியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியை துவக்கி வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்பும் போட்டியில் பங்கேற்க யாரும் வராத நிலையில் இன்றைய போட்டி முடித்து வைக்கப்பட்டது. இன்று யாரும் பங்கேற்காமல் இருந்தால் ராமவிலாஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படலாம். மேலும் கபடி போட்டியை காண பாஜக தொண்டர்களே வராததால் மைதானம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications