Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டொனால்ட் டிரம்ப்பின் வாழ்நாள் கனவு.. அமெரிக்காவில் எந்த அதிபருக்கு வராத ஆசை.. 3வது முறை சாத்தியமா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவது குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். எனது நெருங்கிய நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் அடுத்த சில வாரங்களில் பேசுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையில் வெற்றிகரமான முடிவை அடைவதில் எந்தவித சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்!"என கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது என்று குற்றம்சாட்டி வந்த அதிபர் டிரம்ப், ஒருகட்டத்தில் அதிக வரி விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார். அதன்பிறகு ரஷ்யா உடன் எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் வரி விதிப்பேன் என்றும் மிரட்டல் விடுத்தார். ஆனால் இந்தியாவோ ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.

US Donald trump india narendra modi

இதனால் கோபம் அடைந்த டிரம்ப், இந்தியா உடனான வர்த்தகப் பற்றாக்குறை நிவர்த்தி செய்வதற்காக பரஸ்பர வரியாக 25 சதவீதம் விதித்தார். இதேபால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாகவும் தனியாக 25% வரிகளை விதித்தார். அதேநேரம் இதில் சில பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஜவுளி, தோல், இறால், கைவினைப் பொருட்கள் மற்றும் என்ஜினிரிங் துறைகள் என 60 சதவிகிதத்துக்கும் அதிகமான இந்தியாவின் ஏற்றுமதிகள் 50% வரிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர், சூரத், மும்பை, அஹமதாபாத், விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மங்களூர், கொச்சி என பல்வேறு தொழில்நகரங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. கடல் உணவு வணிகத்தை நம்பியுள்ள மாநிலங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அதேபோல் தோல் மற்றும் ஜவுளி தொழிலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் விரைவில் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மத்திய அரசும், அமெரிக்கா அதிகாரிகளுடன் இதுபற்றி பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகி வருகிறது. பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வண்ணம், அமெரிக்க அதிபர் டிரம்ப் பச்சை கொடி காட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ட்வீட் பதிவில், "இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவது குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். எனது நெருங்கிய நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் அடுத்த சில வாரங்களில் பேசுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையில் வெற்றிகரமான முடிவை அடைவதில் எந்தவித சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்!"என கூறியுள்ளார்.

இந்த பதிவின் மூலம் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. தற்போதைய சூழலில் சுமூக தீர்வினை எட்டினால் தான் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நல்லது என்பதால், எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+