சடசடவென சரிந்த வீடுகள்.. நீலகிரியை மிரட்டிய பேய் மழை.. 10 நாளுக்கு பிறகு குறைகிறது.. மக்கள் நிம்மதி
நீலகிரியில் 10 நாட்களுக்கு பிறகு கனமழை குறைந்து காணப்படுகிறது
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு, மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளது.. இது மாவட்ட மக்களை நிம்மதியில் ஆழ்த்தி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது... குறிப்பாக, ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மழையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது..
ஊட்டி மற்றும் குந்தாவில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது... இதனால், பல இடங்களில் மரங்கள் விழுந்து விபத்து ஏற்பட்டன..

கூடலூர்
இதன்காரணமாக, ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மழை தொடர்வதால் பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாகவே விடுமுறை விடப்பட்டது... ஆனாலும் மழை தொடரும் என்று கூறப்படுகிறது.. இந்த 10 நாட்களாகவே, கடும் மழை பெய்து வரும் நிலையில், இதுவரை கூடலூர் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன... ஊட்டி - கூடலூர் சாலையில் நடுவட்டம் உட்பட மாவட்டத்தில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது...

ஆரஞ்சு அலர்ட்
நீலகிரியில் தற்சமயம், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கூடலூர் பகுதிதான்.. இங்கு மழை நிற்காமல் பெய்து வருகிறது.. இதனால், மாயாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தெப்பக்காடு தரைப்பாலத்திற்கு மேல் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது... இங்கு மழை அதிகம் பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டது. எனவே, மண்சரிவு பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து, மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்..

பழங்குடி மக்கள்
அந்தவகையில், 3 முகாம்களில் 40-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இவர்களில் 22 பேர், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பழங்குடி மக்களாவர்.. இவர்களின் வீடுகள் எல்லாம் பழமையானவை என்பதாலும், ஆற்றின் ஓரங்களில் உள்ளதாலும், அவைகள் மிகுந்த சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.. இங்கிருப்பது ஆபத்து என்பதால், இவர்களை பத்திரமாக அழைத்துவந்து முகாம்களில் தங்க வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம்..

படுக்கை வசதி
மற்றொரு பக்கம், அவர்களின் வீடுகளை சீர்செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இம்மக்களுக்கு, உணவு, துணிமணிகள், உட்பட அனைத்து படுக்கை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தந்துள்ளது.. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மிரட்டி கொண்டிருந்த மழையானது, நேற்றில் இருந்து 60 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.. இது மாவட்ட மக்களை ஓரளவு நிம்மதியை தந்துள்ளது.. எனினும், மீட்பு நடவடிக்கை பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
-
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications